சென்னையில் ஜில் ஜில் குளிருடன் பரவலாக மழை.. குளிர் காற்றால் மக்கள் அவதி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் ஜில் ஜில் குளிருடன் பரவலாக மழை பெய்த போது மேலும் காற்று குளிர்ச்சியாக இருந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அந்தளவுக்கு கைக் கொடுக்கவில்லை. நாளையுடன் வடகிழக்கு பருவமழை விடை பெறுகிறது. இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் பரவலாக மழை பெய்தது.

சென்னை அசோக் நகர், கே கே நகர், கிண்டி, அடையாறு, ஈக்காட்டுத்தாங்கல், மத்திய கைலாஷ், கோட்டூர்புரம், ஆழ்வார்பேட்டை, புரசைவாக்கம், வேப்பேரி, எழும்பூரிலும் மழை பெய்தது. சில இடங்களில் கனமழை பெய்தது.
ஏற்கெனவே மார்கழி மாத குளிரால் மக்கள் அவதியுறும் நிலையில் இந்த மழையால் மேலும் குளிர் காற்று நிலவியது. இதனால் மார்கழி மாதத்தில் கோலம் போடுபவர்களும், கோயில் செல்வோரும், சீக்கிரமாக அலுவலகம் செல்வோரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications