Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாம்பரம் போல் உருவெடுக்கும் பரங்கிமலை ஸ்டேஷன்.. 13 ரயில் நிலையங்களை திறந்து வைத்தார் மோடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம், போளூர், திருவண்ணாமலை, விருதாச்சலம், சாமல்பட்டி, குழித்துறை, சூலூர்பேட்டை மற்றும் கேரளாவில் 3 ரயில் நிலையங்கள் உள்பட 13 ரயில் நிலையங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். கூடுதல் அறைகள், லிப்ட், நடை மேம்பாலம், கூடுதல் நடைமேடைகள், பயணிகள் காத்திருப்பு அறைகள், நுழைவு வாயில்கள் சீரமைப்பு, நகரும் படிக்கட்டுகள், பன்னடுக்கு வாகன நிறுத்தங்கள், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.

இந்தியா முழுவதும் 'அம்ரித் பாரத்' ரயில் நிலைய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 1,300-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதில் மேம்படுத்தப்பட்ட 103 நிலையங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொளி மூலம் திறந்து வைத்தார்.

Modi Inaugurates 13 Railway Stations Parangimalai Set for Major Upgrade Like Tambaram

'அம்ரித் பாரத்' திட்டத்தில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 19 ரயில் நிலையங்களும், குஜராத்தில் 18 ரயில் நிலையங்களும், மகாராஷ்டிராவில் 15 ரயில் நிலையங்களும், தமிழ்நாட்டில் 9 ரயில் நிலையங்களும், ராஜஸ்தானில் 8 ரயில் நிலையங்களும், சத்தீஸ்கர் மாநிலத்தில் 5 ரயில் நிலையங்களும் சீரமைக்கப்பட்டுள்ளன. இதேபோல் இரண்டு ரயில் நிலையங்கள் பீகாரிலும், மூன்று ஜார்க்கண்டிலும், ஐந்து கர்நாடகாவிலும், இரண்டு கேரளாவிலும், ஆறு மத்தியப் பிரதேசத்திலும், மூன்று தெலுங்கானா மாநிலத்திலும், மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், அசாம், புதுச்சேரி, ஹரியானா மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் தலா ஒரு நிலையமும் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.

இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்பட தெற்கு ரயில்வேக்கு உள்பட்ட 90 ரயில் நிலையங்களை மறுசீரமைக்கும் பணி கடந்த 2023-ம் ஆண்டு ஆரம்பம் ஆனது. சென்னை ரயில்வே கோட்டத்தில் 17 ரயில் நிலையங்கள் மறுசீரமைக்கப்பட்டு வருகிறது. சென்னை கடற்கரை, கிண்டி, பரங்கிமலை, பூங்கா, மாம்பலம், கூடுவாஞ்சேரி, பெரம்பூர், அம்பத்தூர், திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, ஜோலார்பேட்டை, கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை, குரோம்பேட்டை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் மேம்பாட்டுப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பெரும்பாலான ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் 60 சதவீதம் முடிந்துவிட்டது.

இப்போது மறுசீரமைக்கப்படும் ரயில் நிலையத்தில் கூடுதல் அறைகள், லிப்ட், நடை மேம்பாலம், கூடுதல் நடைமேடைகள், பயணிகள் காத்திருப்பு அறைகள், நுழைவு வாயில்கள் சீரமைப்பு, நகரும் படிக்கட்டுகள், பன்னடுக்கு வாகன நிறுத்தங்கள், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களில் பரங்கிமலை முக்கியமானது. கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் உள்ள பரங்கிமலை ரயில் நிலையம் வழியாக நாள்தோறும் 200-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் செல்கின்றன. இந்த ரயில் நிலையம் தான் வேளச்சேரி பறக்கும் ரயில் வழித்தடத்தையும், மெட்ரோ ரயிலையும் இணைக்கும் ரயில் நிலையம் ஆகும். அதாவது எழும்பூர், சென்ட்ரல் தாம்பரத்திற்கு அடுத்தபடியாக பரங்கிமலை முக்கியமான ரயில் நிலையமாக உருவெடுத்துள்ளது.

பரங்கிமலை ரயில் நிலையம் ரூ.15 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்டிருக்கிறது. கூடுதல் அறைகள், நுழைவு வாயில்கள் சீரமைப்பு, முன்பதிவு அலுவலகம், கூடுதல் பயணிகள் இருக்கை, கண்காணிப்பு கேமரா, வாகன நிறுத்த வசதி, டிஜிட்டல் தகவல் பலகை உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், தெற்கு ரயில்வேயில் அம்ரித் பாரத் ரயில் நிலைய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பணிகள் முடிந்துள்ள பரங்கிமலை, சூலூர்பேட்டை உள்பட 13 ரயில் நிலையங்களை இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார்

தெற்கு ரயில்வேயில் பரங்கிமலை, ஸ்ரீரங்கம், போளூர், திருவண்ணாமலை, விருதாச்சலம், சாமல்பட்டி, குழித்துறை, சூலூர்பேட்டை மற்றும் கேரளாவில் 3 ரயில் நிலையங்கள் உள்பட 13 ரயில் நிலையங்களை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். காணொலி காட்சி வாயிலாக காலையில் நிகழ்ச்சி நடந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+