அடமான பத்திரம்.. சொத்து விற்பனையில் புதிய நடைமுறை.. பத்திரத்தில் இதெல்லாம் இனி கட்டாயம்: தமிழக அரசு
சென்னை: தமிழக மக்களின் நன்மைக்காக பல்வேறு அதிரடிகளை பதிவுத்துறை கையில் எடுத்து வருகிறது.. அந்த வகையில் இப்போதும் ஒரு அறிவிப்பையும், அது தொடர்பான வழிகாட்டுதல்களையும் வெளியிட்டிருக்கிறது
எங்கெல்லாம் மோசடி நடக்கிறதோ, எங்கெல்லாம் போலி பத்திரங்கள் தாக்கல் செய்யப்படுகிறதோ, அங்கெல்லாம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கைகள் பாய்ந்தபடியே உள்ளன..

அதற்கேற்றவாறு, பதிவுத்துறையும் இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க, அடுத்தடுத்த முக்கிய உத்தரவுகளையும், புதிய நடைமுறைகளையும் பிறப்பித்தவாறே உள்ளது. கடந்தவாரம் கூட, ஒரு உத்தரவு போடப்பட்டிருந்தது.
ஆவணங்கள்: அதன்படி, பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதியப்படும் சொத்துக்கள் குறித்த புகைப்படமும் ஆவணமாகவே இருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.
அதாவது, வீடு, மனை விற்பனைக்கான கிரைய பத்திரங்களை பதிவுக்கு தாக்கல் செய்வோர், அதில் கட்டடங்கள் இருப்பதை மறைத்து மோசடி செய்வதாக புகார்கள் எழுந்தன.. எனவே, காலி மனை விற்பனையின் போது, சொத்தின் புகைப்படம் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டது.
சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு செய்யும்போது சொத்தின் புகைப்படங்களை இணைக்க வேண்டும் என்றும், பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதியப்படும் சொத்துக்கள் குறித்த புகைப்படமும் ஆவணமாக இருக்க வேண்டும் என்று தமிழக அரசு சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவானது வரும் அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரப்போகிறது.
மோடிகள்: சில புதிய வழியில் மோசடி செய்வது கண்டுபிடிக்கப்பட்டதால், இந்த புதிய நடைமுறையானது, அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் பின்பற்றப்படும் என்றும், கூடுதல் வழிகாட்டுதல்கள் பதிவுத்துறை தலைவரால் தனியே வழங்கப்படும் என்றும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழிகாட்டுதல்கள் தற்போது வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக, பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பிறப்பித்துள்ள புதிய வழிகாட்டுதல்கள் இதுதான்:
"கட்டிடம் இருந்தாலும், இல்லாவிட்டாலும், விற்கப்படும் சொத்தின் இப்போதைய புகைப்பட பிரதியை, பத்திரத்தில் இணைக்க வேண்டும். 'ஏ4' அளவில் அச்சு பிரதி எடுத்து பத்திரத்தில் சேர்த்து, அதற்கும் பக்க எண் வழங்க வேண்டும். அந்த பிரதியில், சொத்தை விற்பவர், வாங்குபவர் என, 2 பேருமே கையெழுத்திட வேண்டும்...
வழிகாட்டுதல்கள்: நிதி நிறுவனங்களில் கடன் பெற தாக்கல் செய்யப்படும் அடமான பத்திரம், ஆவண ஒப்படைப்பு பத்திரம், நிறுவனங்களால் கடன் கணக்கு முடிவில் எழுதி கொடுக்கப்படும் ரசீது ஆவணம், உயில் உள்ளிட்ட பத்திரங்களுக்கு, இந்தக் கட்டுப்பாடு பொருந்தாது. புகார்கள் எழாத வகையில், இந்த புதிய நடைமுறையை சார் - பதிவாளர்கள் அமல்படுத்த வேண்டும்" என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications