நம்ம சிங்கார சென்னையா இது? ஒரே இரவில் குக்கிராமமாக காட்சியளித்த தலைநகர்! இந்த போட்டோவை பாருங்க!
சென்னை: சென்னை மாநகரின் பெரும்பாலான இடங்களில் நேற்று இரவு மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் மக்கள் அவதியடைந்தனர். இரவு முழுவதும் மின் தடையால் சென்னை இருண்டு கிடந்த வீடியோவும் புகைப்படமும் வைரலாகி வருகிறது.
சென்னை திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், கோட்டூர்புரம், மயிலாப்பூர், தேனாம்பேட்டை, நந்தனம், அடையாறு, மந்தைவெளி, சூளைமேடு, மாதவரம் மற்றும் வடசென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது.

இதனால் பொதுமக்கள் தூக்கமில்லாமல் தவித்தனர். இந்த அறிவிக்கப்படாத மின் வெட்டு ஏற்பட்டதை அடுத்து பொதுமக்கள் பல இடங்களில் போராட்டமும் நடத்தினர். இந்த நிலையில் நேற்றைய மின் தடைக்கான காரணத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கியுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "சென்னையின் முக்கியமான மின்சார மையமாக மணலி துணை மின் நிலையம் (400/230 கிலோவோல்ட்) விளங்குகிறது. இது நகரின் முக்கிய பகுதிகளுக்கு மின்சாரம் வழங்குகிறது. வழக்கமாக, இத்துணை மின் நிலையத்திற்கு மின்சாரம் வழங்குவதற்கு பிரத்தியேகமாக அலமாதி மற்றும் NCTPS II என இரண்டு மின்னூட்டி ஆதாரங்கள் உள்ளன.
இவற்றில், ஏதேனும் ஒரு மின் பாதையில் பழுது ஏற்பட்டாலும், அடுத்துள்ள மின்னூட்டி ஆதாரம் வழியாக இத்துணை மின் நிலையத்திற்கு 100% மின்சாரம் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக மின்சாரத்தை பெற்று சுமார் 800 முதல் 900 மெகாவாட் அளவிலான மின்சாரத்தினை சென்னையின் முக்கிய துணை மின் நிலையங்களான புளியந்தோப்பு, மணலி, தண்டையார்பேட்டை, மயிலாப்பூர் (பழைய & புதிய), ஆர்.ஏ. புரம், பேசின் பிரிட்ஜ், வியாசர்பாடி, மற்றும் செம்பியம் ஆகியவற்றின் வாயிலாக, சென்னையின் முக்கிய பகுதிகளான மயிலாப்பூர், லூஸ், சாந்தோம், நுங்கம்பாக்கம், ராயபுரம், தண்டையார்பேட்டை, டோல்கேட், சைதாப்பேட்டை, வியாசர்பாடி, செம்பியம், கொளத்தூர், பெரியார் நகர், மாதவரம், புழல், ரெட்ஹில்ஸ், கொடுங்கையூர், அண்ணாசாலை, பாரிமுனை, மேற்கு ஜார்ஜ் டவுன், எழும்பூர், மற்றும் சிந்தாதிரிப்பேட்டை ஆகிய பகுதிகளுக்கான மின்சாரத்தை விநியோகித்து வருகிறது.
செப்டம்பர் 12, 2024 அன்று, இரவு சுமார் 09:58 மணி அளவில், மேற்கண்ட 400/230 கி. வோ. மணலி துணை மின் நிலையத்தின் மின்சாரம் வழங்கும் இரண்டு மின்னூட்டி ஆதாரங்களும் இயக்கத்தில் இருந்த போதும், எதிர்பாராத விதமாக 400/230 கி. வோ. அலமாதி துணை மின்நிலையத்தில் ஒரு மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக, மணலி துணை மின்நிலையத்திற்கு மின்சாரம் வழங்கும் இரண்டு 400 கிலோ வோல்ட் மின் ஆதாரங்களின் (அலமாதி மற்றும் NCTPS II) அடுத்தடுத்த மின்தடைக்கு வழிவகுத்தது.
மேலும், இத்துணை மின் நிலையத்தில், ஒரு ஜம்பர் துண்டிப்பும் கண்டறியப்பட்டது. தீ உடனடியாக அணைக்கப்பட்டது. இருப்பினும், இந்த இரட்டை மின் ஆதாரங்களின் செயலிழப்பு காரணமாக மயிலாப்பூர், லஸ், சாந்தோம், நுங்கம்பாக்கம், ராயபுரம், தண்டையார்பேட்டை, டோல்கேட், சைதாப்பேட்டை, வியாசர்பாடி, செம்பியம், கொளத்தூர், பெரியார்நகர், மாதவரம், புழல், ரெட்ஹில்ஸ், கொடுங்கையூர், அண்ணாசாலை, பாரிமுனை, மேற்கு ஜார்ஜ் டவுன், எழும்பூர், மற்றும் சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்தடை ஏற்பட்டது.
மின் தடை காரணமாக, பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை நீக்கி, மாற்று வழியில் மின்சாரம் விநியோகம் வழங்கிட அனைத்து நடவடிக்கைகளும் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது. சீரமைப்பு பணிகளை மேற்கொண்ட போது, கீழ்க்கண்ட மின்னூட்டிகளில் அதிக மின் பளு காரணமாக பாதிப்புகள் ஏற்பட்டது.
1. 230 கி.வோ. வட சென்னை - தண்டையார்பேட்டை 1 & 2 ஆகிய மின்னூட்டிகளில் ஜம்பர் துண்டிப்பு.
2. 230 கி.வோ. கலிவேந்தம்பட்டு - தரமணி மின்னூட்டியில் ஜம்பர் துண்டிப்பு.
3. 230 கி. வோ. ஸ்ரீபெரும்புதூர் - தரமணி மின்னூட்டியில் ஜம்பர் துண்டிப்பு.
இதனால், மின்சாரம் சீரமைப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டாலும், போர்க்கால அடிப்படையில் பணிகள் முடுக்கி விட்டு, மாற்று வழியில் மின்சாரத்தை மீட்டு எடுக்கும் பணிகள் இரவு 11.00 மணி அளவில் தொடங்கப்பட்டு, நள்ளிரவு 12.00 மணி அளவில் அண்ணாசாலை, சிந்தாதிரிப்பேட்டை, நுங்கம்பாக்கம், செம்பியம், பெரியார் நகர் பகுதிகளுக்கு உட்பட்ட துணை மின் நிலையங்களுக்கும், 13.09.2024 காலை 01.00 மணி அளவில் புளியந்தோப்பு, கொளத்தூர் பகுதிகளுக்கு உட்பட்ட துணை மின் நிலையங்களுக்கும், 02.00 மணி அளவில் மணலி, மயிலாப்பூர், வியாசர்பாடி, அடையாறு மற்றும் எண்ணூர் பகுதிகளுக்கும் என சென்னை மாநகரம் முழுவதும் 100% மின்சாரம் சீரமைக்கப்பட்டது.
அதிகாலை 02.30 மணிக்குள் சென்னையில் மின் தடை ஏற்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் மின்விநியோகம் சரிசெய்யப்பட்டு, தற்போது வரையில் தங்குதடையின்றி சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது,
மேற்கண்ட மின்தடை காரணமாக, சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து மருத்துவமனைகள் மற்றும் அனைத்து அத்தியாவசிய சேவைகளுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
அத்தியாவசியத் தேவைகள் ஏதும் பாதிக்கப்படவில்லை. தற்போது மின் சேவை 100 சதவீதம் சீர் செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவிகப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு சென்னையில் மின்தடையால் நகரமே எப்படி இருண்டு கிடந்தது என்பது குறித்த வீடியோவும் புகைப்படமும் வெளியாகியுள்ளது. பொதுவாக குக்கிராமங்கள், மலைக் கிராமங்களில்தான் மின்சாரம் இல்லாமல் இருண்டு கிடக்கும். ஆனால் சிங்கார சென்னை, எத்தனையோ முன்னணி நிறுவனங்கள், கல்லூரிகள், பள்ளிகள் கொண்ட சென்னை இருண்டு கிடந்தது காண்போரை அதிரச் செய்தது.
-
சென்னையில் 6 சிட்டிங் திமுக எம்எல்ஏக்களுக்கு ‘கல்தா’.. அண்ணா நகர் முதல் வில்லிவாக்கம் வரை.. லிஸ்ட் -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம்












Click it and Unblock the Notifications