குழந்தையின் வாயில் ஆசிட் ஊற்றி கொன்றுவிட்டு.. தூக்கில் தொங்கிய தாய்
சென்னையில் 3 வயது மகனை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை: வாயில் ஆசிட் ஊற்றி குழந்தையை கொலை செய்துவிட்டு, தாயும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னை நகரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
அரியானா மாநிலத்தை சேர்ந்த தம்பதி தினேஷ் - ரக்ஷிதா. இவர்களுக்கு 3 வயதில் ருத்ரா என்ற மகன் இருக்கிறார்.
இவர்களது வீடு கோடம்பாக்கத்தில் உள்ளது. தினேஷ் ஒரு விஞ்ஞானி ஆவார். சேத்துப்பட்டில் உள்ள ஒரு ஆராய்ச்சி மையத்தில் வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று, தினேஷ் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு, மாலை வீடு திரும்பினார். அப்போது கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது. நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்கப்படவே இல்லை. இதனால் கதவை உடைத்துகொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, ரக்ஷிதா தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்தார்.
அவரது மகன் ருத்ரா கட்டிலில் பிணமாக சாய்ந்து கிடந்தான். அவனது முகம் வெந்துபோய் இருந்தது. இதை பார்த்து கதறி துடித்த தினேஷ் உடனடியாக வடபழனி போலீஸ் ஸ்டேஷனில் தகவல் அளித்தார்.
விரைந்து வந்த போலீசார், ரக்ஷிதா மற்றும் குழந்தையின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்த ஆரம்பித்தனர். முதல்கட்ட விசாரணையில், ரக்ஷிதா சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது. அதனால்தான் குழந்தையின் வாயில் ஆசிட் ஊற்றி கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.
-
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா?












Click it and Unblock the Notifications