ரேஸில் முந்துகிறார் ஜோதிமணி.. அடிக்க போகிறது யோகம்.. தமிழக மகிளா காங்கிரஸ் தலைவியாகிறாரா?
தமிழக மகிளா காங்கிரஸ் தலைவியாக ஜோதிமணி தேர்வாகலாம் என்கிறார்கள்
சென்னை: ஜோதிமணிக்கு அடிக்க போகிறது யோகம்.. தமிழக மகிளா காங்கிரஸ் தலைவியாக எம்பி ஜோதிமணியை நியமிக்க டெல்லி மேலிடம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் பரபரக்கின்றன.
மகிளா காங்கிரஸ் தலைவராக இருக்கும் ஜான்சி ராணியின் பதவி காலம் முடிவடைந்துள்ளது. எனவே, புதிய தலைவரை தேர்வு செய்வதற்காக நடவடிக்கைகளை காங்கிரஸ் மேலிடம் எடுத்து வருகிறது.
மகிளா காங்கிரஸ் தலைவர் பதவிக்காக கடுமையான போட்டி நிலவுகிறது... இதில், ஜோதிமணி, ஹசீனா சையத், சுமதி அன்பரசு, வழக்கறிஞர் சுதா, உள்ளிட்ட பலரும் மகிளா காங்கிரஸ் தலைவர் பதவியை கைப்பற்ற முயற்சி செய்து வருகின்றனர்.

மூத்த நிர்வாகிகள்
மகிளா காங்கிரசின் தமிழக மேலிட பொறுப்பாளர் சவுமியாதான் சென்னையில் முக்கிய நிர்வாகிகள் மத்தியில் நேர்முக தேர்வு நடத்தியிருந்தார்.. அதில் 10 பேரை தேர்வு செய்து அவர்களை டெல்லி வரவழைத்திருந்தார்... அவர்களுக்கு டெல்லியில் மகிளா காங்கிரசின் மூத்த நிர்வாகிகள் நேர்முக தேர்வு நடத்தினர்... இதில் இருந்து ஒருவரை தமிழக மகிளா காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.

ப.சிதம்பரம் ஆதரவாளர்
அந்த வகையில் 2 பேரின் பெயர்கள் பலமாக அடிபடுகிறது.. ஒருவர் ஹசீனா சையத், மற்றொருவர் எம்பி ஜோதிமணி ஆவார். இதில், ஹசீனா பெயர் பிரதானமாக உச்சரிக்க காரணம், அவர் சிறுபான்மையினத்தை சேர்ந்தவர்... ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளர். மூத்த தலைவரின் ஆதரவு என்பதால் நேரடியான தேர்வுக்கு வாய்ப்பு இருக்கும் என்ற பேச்சு உள்ளது.

ஜோதிமணி
அதேபோல, அவருக்கு டஃப் கொடுப்பவர் ஜோதிமணி.. அரசியல் அனுபவம் பெற்றவர்.. கடுமையான உழைப்பாளி.. ராகுல்காந்தியுடன் நேரடி தொடர்பு வைத்து, முக்கிய பிரச்சனைகளை ஆலோசிப்பவர்.. அதனால் ஜோதிமணியின் பெயர் சற்று பலமாகவே அடிபடுகிறது... கடந்த காலங்களில் மகிளா காங்கிரசை சரியாகவும், துரிதமாகவும் கொண்டு சென்றவர் விஜயதரணிதான்.. அவரைபோலவே ஒருவரைதான் அடுத்த மகிளா காங்கிரஸ் தலைவராக நியமிக்க முடிவாகி உள்ளது.

பட்டியல்
அதன்படிதான், ஜோதிமணியை காங்கிரஸ் மேலிட தலைவர்கள் முன் வைத்துள்ளனர். அதற்கு அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவியும் இசைவு தெரிவித்துள்ளதாகவே சொல்லப்படுகிறது.. இன்னும் 15 நாட்களில் தமிழக மகிளா காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது... அதில் ஜோதிமணிக்குதான் யோகம் அடிக்கும் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன!

மகிளா தலைவி யார்?
ஆனால், யார் தலைவியாக நியமிக்கப்பட்டாலும் சரி, இப்போதுள்ள காங்கிரஸ் சூழல் மிக மோசமாக உள்ளது.. அதற்கு டெல்லி தேர்தல் முடிவு அன்று, குஷ்பு பதிவிட்ட ட்வீட்களே சாட்சி.. எனவே அதல பாதாளத்தில் காங்கிரஸ் உள்ளது.. கூடுதல் விறுவிறுப்பு தேவை.. இளைஞர்கள் எழுச்சி தேவை.. குறிப்பாக வாரிசு அரசியல், கோஷ்டி பூசல்கள்.. உள்ளடி விவகாரங்கள் போன்ற சமாச்சாரங்களை தூக்கி தூரமாக போட்டுவிட்டு.. கட்சியை பலப்படுத்த வீர்யமிக்க தலைவர் தேவை.. பெண்களை திரட்டி வலுப்படுத்த துடிப்பான பெண் தலைவி தேவை.. அதனால் தமிழக மகிளா காங்கிரசுக்கு யார் தேர்வானாலும் சரி... இதையெல்லாம் கருத்தில் கொண்டே செயல்பட வேண்டும் என்பது மட்டும் தெளிவு!
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications