முகேஷின் நெற்றியில் ஏன் சுட்டேன் தெரியுமா.. மாணவர் கொலையில் விஜய் அளித்த பரபரப்பு தகவல்கள்
முகேஷை ஏன் சுட்டேன் என்று விஜய் வாக்குமூலம் தந்துள்ளார்
Recommended Video
சென்னை: "எங்களுடைய ரவுடி கும்பலுடன் முகேஷை சேர்ந்துவிட சொன்னேன்.. ஆனால் அவன் மறுத்துவிட்டான்.. அதனால்தான் துப்பாக்கியால் சுட்டேன்" என்று மாணவன் முகேஷை துப்பாக்கியால் சுட்ட இளைஞர் போலீசில் தெரிவித்துள்ளார்.
உதயா, விஜய் ஆகியோர் முகேஷின் நெருங்கிய நண்பர்கள்! கடந்த வாரம் விஜய்யின் வீட்டுக்கு உதயா சென்றுள்ளார். அங்கு விஜய்யுடன் முகேஷ் ஒரு ரூமில் பேசி கொண்டு இருந்திருக்கிறார். அப்போதுதான் திடீரென துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
சரியாக நெற்றிப்பொட்டில் துப்பாக்கி குண்டு பாய, முகேஷ் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்ததை அடுத்து, ஆஸ்பத்திரியில் கொண்டு போய் அனுமதித்தும், பலனின்றி உயிரிழந்தார்.
அதிசயம்.. ஒரே நாளில் பிறந்த 4 சகோதரிகளுக்கு ஒரே நாளில் கல்யாணம்.. பூரிப்பில் கேரளா!
பப்ஜி
இந்த சம்பவம் தமிழக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தாழம்பூர் போலீசார் துரிதமாக இந்த வழக்கு விசாரணையில் இறங்கினார்கள். நண்பர்கள் பப்ஜி விளையாடிக் கொண்டிருந்ததாகவும், அதனால் ஏற்பட்ட மோதல் காரணமாகவே முகேஷ் துப்பாக்கியால் சுடப்பட்டிருக்கக்கூடும் என்றும் போலீசாரின் முதற்கட்ட தகவல்கள் வந்தன.
துப்பாக்கி
இந்நிலையில், செங்கல்பட்டு கோர்ட்டில் மறுநாளே விஜய் சரணடைந்தார். குப்பை தொட்டியில் துப்பாக்கி கிடைத்ததாகவும், அதை எடுத்து விளையாட்டாக முகேஷின் நெற்றியில் வைத்தபோது தெரியாமல் வெடித்து விட்டதாகவும், அதனாலேயே பயந்துபோய் அங்கிருந்து ஓடிவிட்டதாகவும் விஜய் கோர்ட்டில் நீதிபதியிடம் கூறியிருந்தார். எனினும் ஆன்லைன் மூலம் உணவு விற்பனை செய்யும் வேலையை பார்த்து வந்த விஜய்க்கு இந்த துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பதுதான் பெரும் அதிர்ச்சியை தந்தது. அது ஒரு நாட்டு துப்பாக்கி.
ரவுடி கும்பல்
அதனால் விஜய்யை போலீஸ் காவலில் எடுத்தால் உண்மை நிலவரம் தெரியவரும் என்று போலீசார் முடிவு செய்தனர். ஏனெனில் சென்னையின் புறநகர் பகுதிகளான தாழம்பூர், கூடுவாஞ்சேரி, கேளம்பாக்கம் போன்ற இடங்களில் ஏராளமான இளைஞர்கள் வேலைக்காக, படிப்புக்காக இங்கு வந்து தங்கி படிக்கிறார்கள். இவர்களை குறி வைத்து 2 ரவுடி கும்பல்கள் இயங்கி வருகிறதாம். அதாவது இந்த இளைஞர்களக்க கஞ்சா சப்ளை செய்வதுதான் இவர்களது வேலையே.
2 குரூப்கள்
ஒரு குரூப்புக்கு தலைவர் நெடுங்குன்றம் சூர்யா, இன்னொரு குரூப்புக்கு தலைவர் பெருமாட்டுநல்லூர் செல்வம். இவர்கள் 2 பேர்தான் தாதாக்களாக உள்ளனர். இவர்களுக்குள் நீயா, நானா என்ற அதிகார போட்டியும் உள்ளது. அதனால் ஆளுக்கொரு கும்பலிடம் கள்ளத்துப்பாக்கிகளை வைத்து இருந்திருக்கிறர்கள். முகேஷை கொன்ற குற்றவாளி விஜய், செல்வத்தின் குரூப்பை சேர்ந்தவர். அதனால்தான் விஜய்யிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு, கோர்ட்டில் 3 நாள் அனுமதி வாங்கப்பட்டுள்ளது.
ரவுடி கும்பல்
நடந்த விசாரணையில் பகீர் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. தன்னுடைய ரவுடி கும்பலில் முகேஷையும் சேரும்படி விஜய் வலியுறுத்தி வந்தாராம். ஆனால், முகேஷ் இதற்கு மறுத்து உள்ளதாக தெரிகிறது. வீட்டுக்கு வந்தபோதும், ரவுடி கும்பலில் சேரும்படி வற்புறுத்தியதாகவும், ஆனால் முகேஷ் பிடிவாதமாக இருந்ததால், துப்பாக்கியால் சுட்டு விட்டதாகவும், விஜய் போலீசாரிடம் இப்போது தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சி தகவல்
இதையடுத்து, சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, தனது நண்பரின் வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக விஜய் தெரிவித்ததையடுத்து, அங்கு சென்று அந்த துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். வீடியோ கேம் விளையாட்டுக்காக சுட்டுக் கொலை என்பது போய், கை தவறி சுட்டுவிட்டேன் என்பது போய், ரவுடி கும்பலில் சேர மறுத்ததால் முகேஷை கொன்றதாக கூறியுள்ளது இந்த வழக்கில் திருப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.