பேபி அணை மரங்கள் வெட்ட தந்த அனுமதியை ரத்து செய்வதா? கேரளாவுக்கு பழ.நெடுமாறன் கடும் எச்சரிக்கை
சென்னை: முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பேபி அணையில் 15 மரங்களை வெட்டும் அனுமதியை திரும்பப் பெற்ற கேரளாவுக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பழ.நெடுமாறன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: பெரியாறு அணைப் பகுதியில் அமைந்திருக்கும் பேபி அணைக்கு அருகேயுள்ள 15 மரங்களை வெட்டுவதற்கு கேரள வனத்துறை அனுமதி அளித்தமைக்காக தமிழக முதல்வர் நன்றி தெரிவித்து கேரள முதல்வருக்குக் கடிதம் எழுதியிருந்தார். இதன்மூலம் பேபி அணையை மேலும் வலுப்படுத்த முடியும் என அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இத்தகைய அனுமதி அளித்தமைக்காக கேரள வனத்துறை அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டுமென கேரள காங்கிரசுக் கட்சித் தலைவரும் மற்றும் சில கட்சிகளின் தலைவர்களும் கண்டன அறிக்கை வெளியிட்டனர். உடனடியாக அந்த அனுமதியை கேரள அரசு திரும்பப் பெற்றுக்கொண்டதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

உச்சநீதிமன்றம் சொன்னது என்ன?
2006ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தின் ஆயம் அளித்தத் தீர்ப்புக்கு எதிராக கேரள அரசின் இந்த நடவடிக்கை அமைந்திருக்கிறது. அந்தத் தீர்ப்பில் பின்வருமாறு திட்டவட்டமாக குறிப்பிடப்பட்டுள்ளது. "பெரியாறு அணையில் நீர் தேக்கி வைக்கும் உயரத்தை 142 அடியாக உயர்த்தினால் ஆபத்து ஏற்படும் என்ற கருத்திற்கு எந்த அடிப்படையும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் கேரளம் இதில் முட்டுக்கட்டைப் போடும் வகையிலேயே நடந்துகொள்கிறது.

பெரியாறு அணையின் பாதுகாப்பு
பெரியாறு அணையை வலுப்படுத்த ஒன்றிய நீர்வள ஆணையம் தெரிவித்த அறிவுரைகளை ஏற்று சில பணிகளை தமிழக அரசு செய்துவிட்டது. மீதமுள்ள பணிகளைச் செய்வதற்குக் கேரள அரசு அனுமதிக்க மறுக்கிறது. அணையின் அனைத்துப் பகுதிகளும் பாதுகாப்பாகவே உள்ளன.

அனுமதி
பேபி அணையை பலப்படுத்தப் பணிகளை செய்யவிடாமல் கேரளம் தடுப்பதற்கு எந்தவித காரணமும் இல்லை. எனவே, பேபி அணையை மேலும் பலப்படுத்த தமிழக அரசுக்கு நாங்கள் அனுமதி அளிக்கிறோம். அதற்குக் கேரளம் ஒத்துழைப்பை அளிக்கவேண்டும்" எனக் கூறியுள்ளது.

கேரளா அரசியல் தலைவர்களுக்கு எச்சரிக்கை
பேபி அணையை வலுப்படுத்தினால் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தலாம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளதை நிறைவேற்றவிடாமல் தடுப்பதற்காகவே கேரளத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து முற்றிலும் பொய்யான கூக்குரலை எழுப்புகின்றன. இவ்வளவிற்கும் இந்தக் கட்சிகள் அனைத்தும் தேசிய ஒருமைப்பாடு பற்றிப் பேசும் அகில இந்தியக் கட்சிகளே ஆகும். இந்தப் போக்கு தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிர் விளைவையே ஏற்படுத்தும் என எச்சரிக்கிறேன். இவ்வாறு நெடுமாறன் கூறியுள்ளார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications