Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொரோனா: மும்பையில் தமிழ் வழியில் படித்த 10ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு ரத்து

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது போல மும்பையிலும் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை ரத்து செய்த கையோடு, தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து இருக்கிறது தமிழக அரசு. இதேபோல பிற மாநிலங்களில் வாழ்கிற தமிழகப் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது இதனை ஏற்று மும்பையில் தமிழ் வழியில் படித்த 10ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

மும்பை உள்பட பிற மாநிலங்களில் தமிழ் வழியில் படித்து வரும் மாணவர்களுக்கும் தேர்வு இன்றி தேர்ச்சி செய்யப்பட்டதாக அறிவிக்க வேண்டும் என்று ஏற்கனவே நாம் கட்சி நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்

Mumbai Tamil students all pass Class 10 public exams cancelled

இயக்குனர் பா ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்ததை போல, தமிழ்வழி பயிலும் மற்ற மாநிலத்திலும், குறிப்பாக மும்பை தாராவி பகுதியில் தமிழக பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களின் தேர்வை ரத்து செய்து, தேர்ச்சி பெற்றவர்களாக தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும் என்பதே அம்மாக்களின் எதிர்ப்பார்ப்பு என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் மும்பை வாழ் தமிழர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு மும்பையிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2019-2020ஆம் கல்வி ஆண்டில் இந்த மையத்தில் தேர்வு எழுத 69 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன, காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவிகித மதிப்பெண்களும், வருகைப் பதிவின் அடிப்படையில் 20 சதவிகித மதிப்பெண்களும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல மும்பையிலும் தமிழக அரசின் பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுத பதிவு செய்திருந்த 69 மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகின்றனர். அவர்களுடைய மதிப்பெண்களும் தமிழ்நாட்டில் வழங்கப்படுவதுபோல வழங்க உத்தரவிட்டிருப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+