Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முரசொலி செல்வம் மறைவு.. நேரில் சென்று அஞ்சலி செலுத்திய ஓபிஎஸ்.. ஸ்டாலின் கையை பிடித்து ஆறுதல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மருமகனும், மூத்த பத்திரிகையாளருமான முரசொலி செல்வம் மாரடைப்பு காரணமாக இன்று பெங்களூரில் உயிரிழந்தார். இதையடுத்து சென்னை கோபாலபுரம் கொண்டுவரப்பட்ட அவரது உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் முரசொலி செல்வம் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

முரசொலி செல்வம் இன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மருமகனும், மூத்த பத்திரிகையாளருமான முரசொலி செல்வம் பெங்களூரில் வசித்து வந்தார். இந்த நிலையில் இன்று திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக பெங்களூரில் உள்ள எஸ்.ஆர். ராமையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

murasoli selvam dmk o panneerselvam

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். முரசொலி செல்வம் உயிரிழந்த செய்தி கேட்டு திமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து முரசொலி செல்வம் உடல் சென்னக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டது. சென்னை கோபாலபுரம் இல்லத்திற்கு இன்று மாலை கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்துவதற்காக அங்கு வந்தனர். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மாமா முரசொலி செல்வம் உடலை பார்த்து கண் கலங்கினார். அமைச்சர் துரைமுருகனும் அவரது உடலை பார்த்து கதறி அழுதார். தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வமும் முதல் ஆளாக வந்து முரசொலி செல்வத்தின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். முன்னதாக ஓ பன்னீர் செல்வம் முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு அவரது கையை பிடித்து ஆறுதல் கூறினார்.

murasoli selvam dmk o panneerselvam

அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு உடலுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் முரசொலி செல்வம் உடல் வைக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மருமகனும், மூத்த பத்திரிகையாளருமான முரசொலி செல்வம் பெங்களூரில் வசித்து வந்தார். தமது தாய்மாமாவான கருணாநிதியின் மகள் செல்வியை திருமணம் செய்து கொண்டார் முரசொலி செல்வம்.

murasoli selvam dmk o panneerselvam

செல்வி - முரசொலி செல்வம் தம்பதியினருக்கு எழிலரசி ஜோதிமணி என்ற மகள் இருக்கிறார். பல்வேறு திரைப்படங்களின் தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார் முரசொலி செல்வம். முரசொலி நாளிதழில் சிலந்தி என்ற தலைப்பில் நீண்ட ஆணித்தரமான கட்டுரைகளை முரசொலி செல்வம் தான் எழுதி வந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+