தீவிரவாதம் நமது உறவுகளை முறிக்கக் கூடாது.. கிறிஸ்தவர்களிடம் மன்னிப்பு கேட்ட இஸ்லாமியர்கள்
Recommended Video
சென்னை: சென்னையைச் சேர்ந்த முஸ்லீம் பெரியவர்கள் அடங்கிய குழுவினர் சர்ச் ஒன்றுக்குச் சென்று இலங்கையில் தேவாலயங்களில் நடந்த தாக்குதலுக்காக மன்னிப்பு கோரிய செயல் அனைவரையும் நெகிழ வைத்து விட்டது.
கொழும்பில் உள்ள தேவாலயங்களில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதல் அனைவரையும் உலுக்கி விட்டது. 300க்கும் மேற்பட்ட அப்பாவிகளின் உயிர்கள் அநியாயமாக பறிக்கப்பட்டன.
இந்த சம்பவத்திற்கு உலகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த சில முஸ்லீம் பெரியவர்கள் அடங்கிய குழு சர்ச் ஒன்றுக்குச் சென்று கிறிஸ்தவ மக்களிடம் மன்னிப்பு கோரிய செயல் அனைவரையும் நெகிழ வைத்து விட்டது..
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த முஸ்லீம் பெரியவர்கள் குழு, செயின்ட் லூக் சர்ச்சுக்குச் சென்றனர். தங்களது கையில் தீவிரவாதம் நமது உறவை முறிக்க அனுமதிக்கக் கூடாது என்று எழுதப்பட்டிருந்த பதாகைகளை ஏந்தியிருந்தனர். இலங்கை குண்டுவெடிப்புத் தாக்குதலுக்கு மன்னிப்பு கோரும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்திப் பிடித்தபடி அவர்கள் சர்ச்சுக்குள் அணிவகுத்து நின்றனர்.
இந்த செயல் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்தது.