"எவன் வர்றான் பார்ப்போம்".. டெல்லி வரை பறந்த புகார்.. கொந்தளிக்கும் பாஜக.. கையை பிசையும் திமுக.. ஏன்
கரூர் சுவர் விளம்பரங்களில் கரி பூரிய மர்மநபர்கள் யார் என்று தெரியவில்லை
சென்னை: யார் இந்த வேலையை பார்த்தது என்று தெரியவில்லை.. திமுக மீது டெல்லி வரை புகார் பறந்துள்ள நிலையில், புதிய பரபரப்பு அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ளது.
கரூர் நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பிருக்கும் சுவர்களில் நிறைய விளம்பரங்கள் இடம்பெறுவது வழக்கம்.
குறிப்பாக, அரசியல் கட்சியினர் தேர்தல் சமயங்களில் இந்த சுவர் விளம்பரங்களில் கவனம் செலுத்துவார்கள்.. அந்த வகையில், திமுகவினர் தற்போது சுவர் விளம்பரம் செய்திருக்கிறார்கள்..

செந்தில் பாலாஜி
இதே மாவட்டத்தை சேர்ந்த திமுக அமைச்சர் செந்தில்பாலாஜி, பெரும்பாலும், கரூர் வந்தால் இந்த கோட்டாட்சியர் அலுவலகத்தின் அருகில் உள்ள கரூர் கெஸ்ட் ஹவுசில் தங்குவதுதான் வழக்கம்.. அங்கிருந்துதான், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்வார். இந்த கோட்டாட்சியர் அலுவலகத்தின் முன்புதான்,, பயணியர் மாளிகையும் உள்ளது.. அதனால், எதிரில் உள்ள சுவர் விளம்பரங்களை செந்தில்பாலாஜி கவனிக்கவே செய்வார்..

காம்பவுண்டு சுவர்
இப்படிப்பட்ட சூழலில்தான் ஒரு பிரச்சனை வெடித்துள்ளது.. இங்கு, திமுகவினர் சுவர் விளம்பரம் செய்யாத, ஒரு பகுதியில் பிரதமர் மோடியின் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.. அதாவது பிரதமர் மோடிக்கு செப்டம்பர் 17-ம் தேதி அன்று பிறந்தநாள் ஆகும்.. இதை கொண்டாடும் விதமாக கரூர் மாவட்ட பாஜக சார்பில் விளம்பரங்கள் இந்த சுவர்களில் செய்யப்பட்டிருந்தது.. "கோட்டாட்சியர் அலுவலக காம்பவுண்டு சுவரில், நாங்கள்தான் விளம்பரம் செய்வோம்" என்று திமுக தரப்பினர் பாஜகவினரிடம் சொல்லி உள்ளதாக தெரிகிறது..

கைகலப்பு
இது தொடர்பாக மாவட்ட பாஜக - திமுகவினர் இடையே 2 நாட்களுக்கு முன்பு வாக்குவாதங்களும் நடந்துள்ளன.. அது கைகலப்பு வரை வந்திருக்கிறது. இந்த விஷயம் கேள்விப்பட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்துள்ளனர்.. அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருதரப்பினரையும் அமைதியாகச் செல்லும்படி அறிவுறுத்தி இருக்கிறார்கள்.

மைதானம்
இந்நிலையில்தான், திருவள்ளூர் மைதானம் முன்பு, தனியார் சுற்றுச்சுவரில் பாஜக செய்யப்பட்டிருந்த விளம்பரத்தின்மீது யாரோ கருப்பு மை பூசியிருக்கிறார்கள்.. அந்த விளம்பரத்தில் பிரதமர் மோடி, மாநில தலைவர் அண்ணாமலை, கரூர் மாவட்ட பாஜக தலைவர் வி.வி.செந்தில்நாதன் போன்றோரின் போட்டோக்கள் இடம்பெற்றிருந்த நிலையில், அவைகளின் மீதுதான் மர்மநபர்கள் கருப்பு மை அப்பிவிட்டு சென்றுள்ளனர். பூசியுள்ளனர்.

செந்தில்நாதன்
இது பாஜகவினருக்கு கடுமையான அதிர்ச்சியை தந்து வருகிறது.. போலீசாரின் தூண்டுதலின் பேரிலேயே, திமுகவினர் சுவர் விளம்பரங்கள் மீது கருப்பு மை பூசியுள்ளனர் என்ற குற்றச்சாட்டுகள் கிளம்பி உள்ளன... எனவே, திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி பாஜக கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று பாஜகவினர் புகார் அளித்தனர்.

எவன் வர்றான் பார்ப்போம்
அதுமட்டுமல்ல, சுவர் விளம்பரங்களில் மர்மநபர்கள் இப்படி செய்திருப்பது சிசிடிவியில் பதிவாகி இருக்கின்றன. இந்த சிசிடிவி காட்சிகள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன... சுவர் விளம்பரங்களை அழிக்கும்போது, "எவன் வர்றான் பார்ப்போம்" என்று 2 பேர் கையில் தடியுடன் நிற்கிறார்கள்... இந்த வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது.

செந்தூரபாண்டியன்
இதனிடையே, இன்னொரு தகவலும் வெடித்து கிளம்பி உள்ளது.. அம்பேத்கர் 132-வது ஜெயந்தி விழாவின் போது கரூர் நகர காவல்துறை ஆய்வாளர் செந்தூரபாண்டியன், பட்டியல் அணி நிர்வாகிகள் மற்றும் அம்பேத்கர் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.. இதுகுறித்து டெல்லியில் உள்ள தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் வி.வி.செந்தில்நாதன் புகார் அளித்துள்ளாராம்.. அந்த புகார் மீது விளக்கம் கேட்டு கரூர் மாவட்ட போலீசுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆக, மொத்தம் கரூர் சம்பவம் டெல்லி வரை பறந்துள்ளது.. இது திமுகவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications