தியாகி சங்கரய்யாவுக்கு தகைசால் விருது...முதல்வர் நேரில் சென்று வழங்கினார்
சென்னை : தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கம்யூனிஸ்ட் இயக்க மூத்த தலைவர் தியாகி சங்கரய்யாவுக்கு 'தகைசால் தமிழர்' விருது வழங்கினார்.
தமிழ் நாட்டிற்கும் தமிழினத்திற்கும் மாபெரும் பங்காற்றியவர்கள் பெருமைப்படுத்தும் விதமாக தகைசால் தமிழர் விருது வழங்க தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டார் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று முதல்வர் கைகளால் இந்த விருதுடன் பாராட்டுச் சான்றிதழ் 10 லட்ச ரூபாய் காசோலை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது தமிழக அரசின் இந்த விருதை பெறும் முதல் ஆளுமையாக சுதந்திர போராட்ட தியாகி மூத்த கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் என் சங்கரய்யா தகைசால் தமிழர் விருதை பெற்றார்

இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு மாணவர் தலைவராகவும் சட்டப்பேரவை உறுப்பினராகவும் அரும்பணி ஆற்றியதுடன் தமிழகத்துக்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றி சமீபத்தில் 100 வயதை அடைந்த தமிழர் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கர யாவை பெருமைப்படுத்தும் வகையில் இந்த ஆண்டடின் தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது
கொரனோ பரவல் முன்னெச்சரிக்கை வயது மூப்பின் காரணமாக சங்கரய்யா கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டிலேயே வசித்து வருகிறார் வெளியில் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதில்லை இதன் காரணமாக கௌரவப்படுத்தும் வகையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரடியாக வந்து முதல் தகைசால் தமிழர் விருதை சங்கரய்யாவிற்கு வழங்கி பாராட்டுச் சான்றிதழ் 10 லட்சத்துக்கான காசோலையை ஆகியவற்றை வழங்கினார்
தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த சங்கரய்யா தமிழக முதலமைச்சரின் கொரனோ நிவாரண நிதிக்கு தனக்கு அளிக்கப்பட்ட நிதியை வழங்கினார்
திமுக பொருளாளர் டி ஆர் பாலு அமைச்சர்கள் துரைமுருகன் பொன்முடி தா.மோ அன்பரசன் பல்லாவரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இ கருணாநிதி செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன் டி கே ரங்கராஜன்
உடனிருந்தனர்












Click it and Unblock the Notifications