10 பைசா தராமல்.. இரு பண மலைகளுக்கு நடுவில் ஜொலித்த தீபலட்சுமி.. உண்மையிலேயே பெஸ்ட்!
அதிமுக, திமுகவுக்கு அடுத்தபடியாக ஓட்டுக்களை தீபலட்சுமி பெற்று வருகிறார்
Recommended Video
சென்னை: அதிமுக, திமுக என்ற இரு பெரும் பண மலைகளுக்கு மத்தியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி ஒளிர் விட்டு ஜொலித்தபடி ஸ்டெடியாக வாக்குகளை பெற்றார்!
ஒரு சுற்றில் அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகம் முன்னிலை வகித்தார் என்றால், அடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கையில் கதிர் ஆனந்த் முன்னிலை வகித்தார். இதனால் எந்த ஒரு மனநிலைமைக்கும் நம்மால் உடனே வர முடியவில்லை.
இதற்கு நடுவில் நாம் தமிழர் உள்ளே புகுந்து டஃப் கொடுத்து, அதிமுக, திமுகவுக்கு கொஞ்ச நேரம் அள்ளு கிளப்பியதுதான் சூப்பர்! அமமுக, மநீம போன்ற கட்சிகளே போட்டியிடாத நிலையில், இரு ஜாம்பவான்களுக்கு நடுவில் ஜிகுஜிகுவென ஒளிர்விட்டு ஜொலித்தார் தீபலட்சுமி.

தீபலட்சுமி
வேலூரில், அதிமுக, திமுக இரு கட்சிகளின் மீதும் பணப்புகார் போன முறையும் வந்தது, இந்த முறையும் வந்தது. ஆனால் வெறும் கொள்கைகளை வைத்து வாக்கு கேட்டு வந்தவர்கள் நாம் தமிழர் கட்சியினர்! அந்த வகையில் இப்போது இவர் தோற்று விட்டாலும், அதிமுக, திமுகவுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு நாம் தமிழர் வளர்ந்துள்ளதைதான் இது நமக்கு காட்டியது.

நாம் தமிழர் கட்சி
திமுகவும் சரி, அதிமுகவும் சரி வாக்காளர்களுக்கு அள்ளி அள்ளி பணம் கொடுத்தன. அதை இரு கட்சிகளும் மறுக்க முடியாது. ஆனால் ஒரு பைசா கூட கொடுக்காமல் கால் கடுக்க நடந்து தொண்டை வறள கத்தி வாக்குகளை சேகரித்த கட்சி நாம் தமிழர் கட்சி. இன்று திமுக, அதிமுகவின் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கக் கூடிய அளவுக்கு அக்கட்சிக்கு வாக்குகள் விழுந்துள்ளதை மறுக்க முடியாது.

கூடுதல் வாக்கு
திமுகவுக்கு நகர்ப்புற வாக்குகள் கை கொடுத்தது போல நாம் தமிழர் கட்சிக்கும் நகர்ப்புற வாக்குகள் கூடுதலாக கிடைத்தன. ஆரம்பத்திலிருந்தே மெதுவாக முன்னேறி வந்த நாம் தமிழர் கட்சி தற்போது நகர்ப்புற வாக்குகள் எண்ணப்படும் நிலையில் கூடுதல் வாக்குகளையும் பெற்றது.

சீமான்
அடிக்கடி கூட்டத்தில் பேசும்போது சீமான் சொல்லுவார், "நான் ஒருத்தன் தொண்டை தண்ணி வற்ற கத்திட்டு இருக்கேனே.. மக்கள் இதை எப்போதான் புரிஞ்சிப்பீங்க?" என்பார். அவர் பேசிய பேச்சுக்களும், ஒரு கட்சி விடாமல் எல்லாரையும் நாக்கை பிடுங்கி கொள்கிற மாதிரி கேள்வி கேட்டதும் வீண் போகவில்லை.

கடின உழைப்பு
இந்த வேலூர் தேர்தலில் நாம் தமிழர் தோற்று இருந்தாலும் சரி, சீமானின் மதிப்பு மேலும் உயர்ந்துதான் தென்படுகிறது. ஏற்கனவே தமிழக அரசியலில் 3-வது இடத்தை பிடித்துள்ள நாம் தமிழர் கட்சி தொடர்ந்து, பத்து பைசா தராமல், அதே இடத்தைதான் தற்போதும் தக்க வைத்துள்ளது என்பது ஊர்ஜிதமாகி உள்ள. இது அத்தனையும் சீமான் என்ற ஒற்றை மனிதனின் கடின முயற்சியே என்பதை தமிழக மக்கள் மறுக்கவே மாட்டார்கள்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications