குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து தவறான தகவல்- நாம் தமிழர் கட்சி பிரமுகர் பாலசுப்பிரமணியன் கைது
சென்னை: குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவலை பரப்பியதாக நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாலசுப்பிரமணியன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குன்னூர் அருகே விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

போலீஸ் வார்னிங்
இந்த விபத்து குறித்து பல்வேறு யூகங்கள் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்பட்டன. இதனையடுத்து குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக தவறான தகவல்கள், வதந்திகளை சமூக வலைதளங்களில் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ரு போலீசார் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

மாரிதாஸ் கைது
இந்நிலையில் குன்னூர் விபத்து குறித்து பாஜக ஆதரவாளரான மாரிதாஸ் என்பவர், திக, திமுக ஆதரவாளர்கள் பலரும் இராணுவ தளபதி விபத்தில் மரணத்தைக் கேலி செய்யும் விதமாகப் பதிவுகள் இடுவதும், சிரிப்பதுமாக எமோஜி போடுவதைக் காண முடிகிறது. ஒவ்வொரு முறையும் இதைச் செய்கிறார்கள். பிரிவினைவாத சக்திகளுக்கு திமுக சிறந்த தேர்வாக இருந்துவருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை என பதிவிட்டிருந்தார். இதனையடுத்து மாரிதாஸ் கைது செய்யப்பட்டார். அதிமுக ஆட்சியில் மாரிதாஸ் மீது கொடுக்கப்பட்ட போர்ஜரி இ மெயில் வழக்கிலும் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார். அவர் மீது குண்டர் சட்டம் பாயலாம் எனவும் கூறப்படுகிறது.

குமரி ஷிபின் கைது
இதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை ஷிபின் என்ற இளைஞர், குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து தவறான தகவல்களை தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் தமது பதிவில் கோவை குண்டு வெடிப்பு, ராஜீவ் படுகொலை, ஹெலிகாப்டர் விபத்து உள்ளிட்ட பல்வேறு கொலை சம்பவங்கள் திமுக ஆட்சியில் தான் நடைபெற்றதாக குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து அவர் கைது செய்யபப்ட்டார்.
Recommended Video

நாம் தம்ழிஅர் கட்சி பாலசுப்பிரமணியன்
தற்போது நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாலசுப்பிரமணியன், குன்னூர் விபத்து குறித்து தமது வலைதளப் பக்கங்களில் தவறாக பதிவிட்டிருப்பதாகவும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்களை இழிவுபடுத்தி பதிவுகள் போட்டிருப்பதாகவும் பாஜக நிர்வாகிகள் போலீசில் புகார் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் பாலசுப்பிரமணியனை கைது செய்தனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications