பாஜக வேணாம்னு பேசினது எல்லாம் நாங்க.. ஆனா திமுக அறுவடை செய்திருக்கு.. சீமான்
பாஜக வேணாம்னு நாங்க பேசினால், அதை திமுக அறுவடை செய்திருக்கிறது என்றார் சீமான்
Recommended Video
சென்னை: "பாஜக வரக்கூடாது என்ற கருத்தை எடுத்து வெச்சதே நாங்கதான். ஆனால் அதை திமுக அறுவடை செய்திருக்கு" என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
மதுரையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நாம் தமிழர் கட்சி சீமான் பேசினார். அப்போது, திமுக பெற்றுள்ள வெற்றி, நாம் தமிழர் கட்சிக்கு இணையாக மக்கள் நீதி மய்யம் பெற்றுள்ள வாக்குகள் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு சீமான் அளித்த பதில்:
"வாக்குக்கு காசு தரலைன்னு ஒரு தலைவனை சொல்ல சொல்லு பார்க்கலாம். காசு கொடுத்த அந்த வேட்பாளரைதானே நீங்க தகுதி நீக்கம் செய்யணும்? நாங்க என்ன தப்பு பண்ணோம். நாங்க நேர்மையா நின்னதுல என்ன பயன்?
படிப்படியாக வெப்பம் குறையும்... கத்திரி வெயில் நாளையுடன் விடைபெறுகிறது
சொந்த காசு
ஐயா வசந்தகுமார் எம்எல்ஏவாவும் இருக்கார், எம்பியாகவும் இருக்கார். இப்போ எம்எல்ஏ பதவியை ராஜினாமா பண்றேன்னு சொல்றார். அப்படின்னா திரும்பவும் அங்கே தேர்தல் வரும். இது எந்த மாதிரியான அமைப்பு? அந்த தேர்தலை அவர் சொந்த காசில் நடத்தி முடிப்பாரா? மக்கள் பணத்தில் நடத்துவாரா? இது திணிக்கப்படுகிற தேர்தல்.
புது நடிகர்
தமிழர்கள் நாங்கள் நாட்டை ஆள வேண்டும் என்று சொல்லும் தத்துவத்தில், அச்சப்படுவார்கள் வேண்டுமானால், கமல் வந்தால் நன்றாக இருக்கும்,என எண்ணி வாக்கு போட்டிருப்பார்கள். 50 வருஷமாக நடிச்ச ஒரு நடிகர் புதுசா வருகிறாரே.. அவருக்கு இந்த முறை ஓட்டு போட்டு பார்க்கலாம் என்றும் நினைக்கலாம். ஆனால், இங்கு என்ன நடந்திருக்கிறது என்று பார்த்தால், பாஜக வரக்கூடாது என்ற கருத்தை எடுத்து வெச்சதே நாங்கதான். ஆனால் அதை திமுக அறுவடை செய்திருக்கு.
திமுக
சீமானுக்கு ஓட்டு போட்டீர்கள் என்றால் பிஜேபி வந்துவிடும் என்று பெரும்பாலான மக்கள் கிறிஸ்துவ இஸ்லாமிய தமிழ் மக்கள் சுத்தமாக ஓட்டு போடவில்லை. இதுவே பெரிய பாதிப்பு. அதை திமுக திட்டமிட்டு செய்தாங்க. வீடு வீடுக்கும் போய் உட்கார்ந்துட்டாங்க. அடுத்த தேர்தலில் கூட சீமானுக்கு ஓட்டு போடுங்க. இந்தமுறை போட்டுடாதீங்க. அப்படி போட்டீங்கன்னா, பாஜக வந்துடும்னு சொன்னாங்க. இப்படி இவங்க பேசினது வலை தளங்களிலேயே இருக்கே.
பைத்தியக்காரத்தனம்
இதில் பாஜக வரக்கூடாது என நினைத்தவர்கள் கடந்த ஐந்து ஆண்டு ஆட்சியில் சகிக்கமுடியவில்லை. பதவியேற்கும் முன்பே இரண்டு பேரை கட்டிவைத்து மாட்டுக்கறி சாப்பிடுகிறார்கள் என அடிக்கிறார்கள். அது பசுக்கறிதானே.. கறியில் என்ன பசுக்கறி, ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, காளை மாட்டுக்கறின்னு கண்டுபிடிக்க முடியுதா என்ன? 8 வயசு குழந்தையை கற்பழிச்சு கொல்றவன், பசுவை பாதுகாப்பேன்னு பேசுறது உலக பைத்தியக்காரத்தனமா இருக்கே?" என்றார்.