பாவ மன்னிப்பு கேட்க வந்த பெண்கள்.. 'பாவம்' செய்த பாதிரியார்.. பெனடிக்ட் ஆன்றோவுக்கு நிபந்தனை ஜாமீன்
சென்னை: இளம்பெண்களுடன் நெருக்கமாக இருந்த படங்கள் வெளியான விவகாரத்தில் கைதான பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவிற்கு நாகர்கோவில் மாவட்ட முதன்மை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ. பெனடிக்ட் ஆன்றோ கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சில ஆலயங்களில் பாதிரியாராக பணியாற்றி உள்ளார். பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ இளம் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாதிரியாரின் லீலைகள் என்ற பெயரில் இளம்பெண்களுடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள், வாட்ஸ் அப் காலில் நிர்வாணமாக பேசிய காட்சிகள் என முகம் சுளிக்கும் வகையில் பல காட்சிகள் இடம் பெற்று இருந்தது. இந்த நிலையில், இளம்பெண் ஒருவர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது புகார் அளித்தார்.
தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அந்த புகாரில் கூறியிருந்தார். இதையடுத்து 5 பிரிவுகளின் கீழ் பெனடிக் ஆன்றோ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. போலீசார் தேடுவதை அறிந்ததும் பாதிரியார் பெனடிக் ஆன்றோ தலைமறைவு ஆனார். அவரை தனிப்படை அமைத்து பெங்களூரு, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தேடி வந்த நிலையில், நாகர்கோவிலில் வைத்து போலீசாரிடம் சிக்கினார்.
அவரை கைது செய்த போலீசார் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறையில் முதலில் அடைத்தனர். பின்னர் பாதுகாப்பு கருதி அவர் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில், பாதிரியார் மீது மேலும் ஒரு பெண் புகார் அளித்து இருந்தார். இந்த புகாரின் அடிப்படையிலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பாதிரியார் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை ஒருநாள் காவலில் எடுத்தும் போலீசார் விசரணை நடத்தினர்.
பெனடிக்ட் ஆன்றோ மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய போலீசார் நடவடிககி எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் எனக் கோரி நாகர்கோவில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இதில் அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியிருந்தது. அவர் மற்றொரு வழக்கிலும் கைதாகி இருந்ததால் அவரால் வெளியில் வர முடியவில்லை.

இந்த நிலையில், மற்றொரு வழக்கிலும் பெனடிக் ஆன்றோவிற்க்கு நாகர் கோவில் மாவட்ட முதன்மை நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. தினமும் காலை மற்றும் மாலையில் நாகர்கோவில் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications