பாவ மன்னிப்பு கேட்க வந்த பெண்கள்.. 'பாவம்' செய்த பாதிரியார்.. பெனடிக்ட் ஆன்றோவுக்கு நிபந்தனை ஜாமீன்
சென்னை: இளம்பெண்களுடன் நெருக்கமாக இருந்த படங்கள் வெளியான விவகாரத்தில் கைதான பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவிற்கு நாகர்கோவில் மாவட்ட முதன்மை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ. பெனடிக்ட் ஆன்றோ கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சில ஆலயங்களில் பாதிரியாராக பணியாற்றி உள்ளார். பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ இளம் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாதிரியாரின் லீலைகள் என்ற பெயரில் இளம்பெண்களுடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள், வாட்ஸ் அப் காலில் நிர்வாணமாக பேசிய காட்சிகள் என முகம் சுளிக்கும் வகையில் பல காட்சிகள் இடம் பெற்று இருந்தது. இந்த நிலையில், இளம்பெண் ஒருவர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது புகார் அளித்தார்.
தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அந்த புகாரில் கூறியிருந்தார். இதையடுத்து 5 பிரிவுகளின் கீழ் பெனடிக் ஆன்றோ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. போலீசார் தேடுவதை அறிந்ததும் பாதிரியார் பெனடிக் ஆன்றோ தலைமறைவு ஆனார். அவரை தனிப்படை அமைத்து பெங்களூரு, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தேடி வந்த நிலையில், நாகர்கோவிலில் வைத்து போலீசாரிடம் சிக்கினார்.
அவரை கைது செய்த போலீசார் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறையில் முதலில் அடைத்தனர். பின்னர் பாதுகாப்பு கருதி அவர் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில், பாதிரியார் மீது மேலும் ஒரு பெண் புகார் அளித்து இருந்தார். இந்த புகாரின் அடிப்படையிலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பாதிரியார் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை ஒருநாள் காவலில் எடுத்தும் போலீசார் விசரணை நடத்தினர்.
பெனடிக்ட் ஆன்றோ மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய போலீசார் நடவடிககி எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் எனக் கோரி நாகர்கோவில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இதில் அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியிருந்தது. அவர் மற்றொரு வழக்கிலும் கைதாகி இருந்ததால் அவரால் வெளியில் வர முடியவில்லை.

இந்த நிலையில், மற்றொரு வழக்கிலும் பெனடிக் ஆன்றோவிற்க்கு நாகர் கோவில் மாவட்ட முதன்மை நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. தினமும் காலை மற்றும் மாலையில் நாகர்கோவில் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications