பாவ மன்னிப்பு கேட்க வந்த பெண்கள்.. 'பாவம்' செய்த பாதிரியார்.. பெனடிக்ட் ஆன்றோவுக்கு நிபந்தனை ஜாமீன்
சென்னை: இளம்பெண்களுடன் நெருக்கமாக இருந்த படங்கள் வெளியான விவகாரத்தில் கைதான பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவிற்கு நாகர்கோவில் மாவட்ட முதன்மை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ. பெனடிக்ட் ஆன்றோ கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சில ஆலயங்களில் பாதிரியாராக பணியாற்றி உள்ளார். பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ இளம் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாதிரியாரின் லீலைகள் என்ற பெயரில் இளம்பெண்களுடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள், வாட்ஸ் அப் காலில் நிர்வாணமாக பேசிய காட்சிகள் என முகம் சுளிக்கும் வகையில் பல காட்சிகள் இடம் பெற்று இருந்தது. இந்த நிலையில், இளம்பெண் ஒருவர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது புகார் அளித்தார்.
தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அந்த புகாரில் கூறியிருந்தார். இதையடுத்து 5 பிரிவுகளின் கீழ் பெனடிக் ஆன்றோ மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. போலீசார் தேடுவதை அறிந்ததும் பாதிரியார் பெனடிக் ஆன்றோ தலைமறைவு ஆனார். அவரை தனிப்படை அமைத்து பெங்களூரு, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தேடி வந்த நிலையில், நாகர்கோவிலில் வைத்து போலீசாரிடம் சிக்கினார்.
அவரை கைது செய்த போலீசார் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறையில் முதலில் அடைத்தனர். பின்னர் பாதுகாப்பு கருதி அவர் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில், பாதிரியார் மீது மேலும் ஒரு பெண் புகார் அளித்து இருந்தார். இந்த புகாரின் அடிப்படையிலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பாதிரியார் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை ஒருநாள் காவலில் எடுத்தும் போலீசார் விசரணை நடத்தினர்.
பெனடிக்ட் ஆன்றோ மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய போலீசார் நடவடிககி எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் எனக் கோரி நாகர்கோவில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இதில் அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியிருந்தது. அவர் மற்றொரு வழக்கிலும் கைதாகி இருந்ததால் அவரால் வெளியில் வர முடியவில்லை.

இந்த நிலையில், மற்றொரு வழக்கிலும் பெனடிக் ஆன்றோவிற்க்கு நாகர் கோவில் மாவட்ட முதன்மை நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. தினமும் காலை மற்றும் மாலையில் நாகர்கோவில் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications