Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாங்குநேரியில் தமிழிசை.. நெல்லை தொகுதியை மாற்றும் நயினார் நாகேந்திரன்.. பாஜகவில் நடப்பது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இம்முறை நெல்லை தொகுதியில் இருந்து மாறலாமா என்று ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் நாங்குநேரி, ஸ்ரீவைகுண்டம் அல்லது சாத்தூர் ஆகிய தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் நயினார் நாகேந்திரன் போட்டியிட ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், தமிழக பாஜக தரப்பில் அதிமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவுக்கு 35 முதல் 40 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என்று பார்க்கப்படுகிறது. இதனால் இப்போதே பாஜகவின் முக்கியத் தலைவர்கள் தங்களுக்கான தொகுதியில் பணிகளை தொடங்கிவிட்டனர்.

Nainar Nagendran

அந்த வகையில் சென்னையின் துறைமுகம் தொகுதியில் வினோஜ் பி செல்வம், வேளச்சேரி தொகுதியில் எஸ்ஜி சூர்யா உள்ளிட்டோர் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி தொகுதியில் போட்டியிட வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

நாங்குநேரி தொகுதியில் நாடார் சமூக வாக்குகள் அதிகம். அதேபோல் மறைந்த வசந்த குமார் அந்த தொகுதியில் எம்எல்ஏ-வாக இருந்து 2019 லோக்சபா தேர்தலில் வென்று எம்பியானார். அதேபோல் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாகவே இருந்திருக்கிறது. இந்த நிலையில் தமிழிசை செளந்தரராஜன் நாங்குநேரியில் போட்டியிட முடிவு செய்திருப்பது பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

மறைந்த வசந்த குமாரின் குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் தமிழிசை செளந்தரராஜன். இதுவும் அவர் நாங்குநேரி தொகுதியை தேர்வு செய்ய காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் பாஜகவுக்காக தமிழிசை செளந்தரராஜன் வெற்றியை பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் நயினார் நாகேந்திரனும் இம்முறை தொகுதி மாறுவதற்கு ஆலோசிப்பதாக தெரிய வந்துள்ளது.

நயினார் நாகேந்திரனுக்கு எப்போதும் ராசி, ஜாதகம், ஜோசியம் உள்ளிட்டவற்றில் அதிக நம்பிக்கை இருக்கும். கடந்த சட்டசபைத் தேர்தலின் போது கூட பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாகவே நயினார் நாகேந்திரன் வேட்புமனுத்தாக்கல் செய்தார். அதற்கு நல்ல நாள் என்பதால் வேட்பு மனுத்தாக்கல் செய்தேன் என்று விளக்கம் அளித்திருந்தார்.

அதேபோல் பொதுக்கூட்டம், சுற்றுப்பயணம் உள்ளிட்டவற்றையும் நல்ல நாள் பார்த்தே தொடங்குவார். அந்த வகையில் 2001ல் நெல்லை தொகுதியில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன், 2006ல் அதே தொகுதியில் தோல்வி அடைந்தார். தொடர்ந்து 2011ல் நெல்லையில் வென்று, 2016ல் தோல்வி அடைந்தார். இதையடுத்து 2021ல் மீண்டும் நெல்லை தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

இதனால் 2026 சட்டசபைத் தேர்தலில் வேறு தொகுதியில் போட்டியிடலாமா என்று ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. முதலில் அவரின் தேர்வு நாங்குநேரியாக இருந்த நிலையில், அங்கு தமிழிசை போட்டியிட விருப்பம் தெரிவித்தது தெரிய வந்துள்ளது. இதனால் ஸ்ரீவைகுண்டம் அல்லது சாத்தூர் தொகுதியில் போட்டியிடவும் வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

அதற்கேற்ப நெல்லை தொகுதியில் நயினார் நாகேந்திரனை வீழ்த்த வேண்டும் என்பதில் திமுக தலைமை குறியாக இருக்கிறது. அதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ள ஸ்டாலின், நேரடியாக திமுக வேட்பாளரை களமிறக்கலாமா என்ற ஆலோசனையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் நயினார் நாகேந்திரனின் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+