மோடி பங்கேற்கும் ஆன்லைன் பாரதி விழா... ரஜினி பங்கேற்க நல்லி குப்புசாமி செட்டியார் நேரில் அழைப்பு
சென்னை: அரசியல் கட்சி தொடங்க உள்ள நடிகர் ரஜினிகாந்தை தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் இன்று போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசினார்.
Recommended Video

அரசியல் கட்சியை அறிவிப்பதில் படுதீவிரமான ஆலோசனைகளை நடத்தி வருகிறார் ரஜினிகாந்த். இது தொடர்பாக அர்ஜூன மூர்த்தி, தமிழருவி மணியனுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார் ரஜினிகாந்த்.

இந்த நிலையில் திடீரென தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார். இது தொடர்பாக விசாரித்த போது, இச்சந்திப்பின் பின்னணியிலும் அரசியல் இருப்பது தெரியவந்தது.
நல்லி குப்புசாமி செட்டியாரை புரவலராக கொண்ட வானவில் பண்பாட்டு மையம் இணையவழி சர்வதேச பாரதி விழாவை நடத்தி வருகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி நாளை உரையாற்ற உள்ளார்.
பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்தையும் பங்கேற்க வைக்க வேண்டும் என்பதற்காக அழைப்பு விடுக்கவே நல்லி குப்புசாமி சென்றாராம். ஆனால் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் தாம் பங்கேற்பது தொடர்பாக எந்த உறுதியையும் ரஜினிகாந்த் தரவில்லையாம்.












Click it and Unblock the Notifications