Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஊட்டியில் அதிக கட்டணம் வசூலிக்கும் விடுதிகளுக்கு செக்.. சென்னை உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஊட்டியில் உரிமம் பெற்று செயல்படும் விடுதிகள், ரிசார்ட்கள் குறித்த விவரங்களை அரசு இணையதளத்தில் வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளிடம் சட்டவிரோதமாக 30,000 முதல் 40,000 ரூபாய் வரை கட்டணங்கள் வசூலிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ பாஸ் முறையை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டிருந்தது.

ooty madras high court government of tamil nadu

இந்த இ - பாஸ் வழங்கும் முன், வாகனங்களில் வருவோரிடம், என்ன மாதிரியான வாகனம், எத்தனை பேர் வருகின்றனர், ஒரு நாள் சுற்றுலாவா அல்லது தொடர்ந்து தங்குவார்களா என்பன உள்ளிட்ட விவரங்களைப் பெற வேண்டும் எனவும் இரு மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் சதிஷ்குமார், பரதசக்கரவர்த்தி அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில், நீதிமன்ற உத்தரவின்படி, இ பாஸ் பெற விண்ணப்பிப்பவர்களிடம் எப்போது வருகிறார்கள், எங்கு தங்க இருக்கிறார்கள், எத்தனை நாட்கள் தங்குவார்கள் என்ற விவரங்களை பெறும் வகையில், விண்ணப்பத்தில் புதிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அரசுத தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தவறான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். இதையடுத்து, முழுமையான விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், ஊட்டியில் உள்ள உரிமம் பெற்ற விடுதிகள், ரிசார்ட்கள் குறித்த விவரங்களை அரசு இணையதளத்தில் பதிவேற்ற செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

மேலும் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளிடம் சட்டவிரோதமாக 30,000 முதல் 40,000 ரூபாய் வரை கட்டணங்கள் வசூலிக்கப்படுவதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள் இந்த உத்தரவினை பிறப்பித்தனர். மேலும், அடுத்த விசாரணையின் போது காணொலி காட்சி மூலம் ஆஜராகும்படி, நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 8 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+