அதிமுகவை ஒரு கட்சியாகவே நான் கருதவில்லை- நாஞ்சில் சம்பத் செம அட்டாக்!
சென்னை: அதிமுகவை ஒரு கட்சியாகவே நான் கருதவில்லை என நாஞ்சில் சம்பத் கடுமையாக விமர்சனம் செய்தார்.
மதிமுகவில் இருந்து கடந்த 2014-ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். இதையடுத்து அவருக்கு அதிமுக பேச்சாளர் பதவி வழங்கப்பட்டது. இதையடுத்து ஜெயலலிதா இறந்தவுடன் சசிகலா தலைமையை ஏற்க விரும்பாமல் விலகுவதாக அறிவித்தார்.
ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்று வந்தபோது... செய்தியாளர் கேட்ட கேள்வி.. டென்சனான நாஞ்சில் சம்பத்
கட்சியிலிருந்து விலகல்
பின்னர் உடனே மனம் மாறி சசிகலா தலைமையை ஏற்றார். இதையடுத்து தினகரனுடன் சேர்ந்து பணியாற்றி வந்தார். இந்த நிலையில் தினகரன் தொடங்கிய கட்சியின் பெயரில் திராவிடம் இல்லை என கூறி அக்கட்சியிலிருந்து விலகினார்.
ஆதரித்து
இதையடுத்து அரசியலிலிருந்து சில காலம் ஒதுங்கி இலக்கியத்தில் நாட்டம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
சேர மாட்டேன்
தற்போது சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்தார். அதன் பிறகு அவர் கூறுகையில் அதிமுக அல்லது மதிமுகவில் கனவில் கூட மீண்டும் சேரமாட்டேன்.
முடிவு
அதிமுகவை ஒரு கட்சியாகவே கருதவில்லை. 10 பேர் சேர்ந்து கொண்டு நடத்தினால் அது கட்சியாகிவிடுமா. சசிகலாவை ஒதுக்கிவிட்டு பொதுக் குழுவை நடத்த எப்படி முடிவு எடுத்தார்கள் என தெரியவில்லை என்றார் நாஞ்சில் சம்பத்.