இந்தியா- இங்கி. டெஸ்ட் போட்டியை விமானத்திலிருந்து ரசித்து.. சேப்பாக்கம் மைதானத்தை படம் பிடித்த மோடி
சென்னை: சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இந்தியா- இங்கிலாந்து இடையே நடைபெறும் டெஸ்ட் போட்டியை விமானத்தில் இருந்து ரசித்ததோடு அதை புகைப்படமாக எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
Recommended Video
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்களை குவித்துள்ளது. இன்றைய தினமும் இந்திய அணி ஆட்டத்தை தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்க சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு தனி விமானத்தில் புறப்பட்டார்.
அப்போது சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணி விளையாடும் ஆட்டத்தை விமானத்திலிருந்தபடியே ரசித்த அவர் சேப்பாக்கம் ஸ்டேடியத்தின் தோற்றத்தை வானிலிருந்து படம் பிடித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சென்னையில் நடைபெறும் இந்தியா- இங்கிலாந்து இடையிலான சுவாரஸ்யமான டெஸ்ட் போட்டியை ஏரியல் வியூவிலிருந்து படம் பிடித்ததாக அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.