ரஜினி எழுச்சி பெற வேண்டும்.. 101 பானைகளில் மக்கள் மன்றம் வைத்த மாஸ் பொங்கல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: ராமநாதபுரம் மாவட்டத்தில், ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நரிக்குறவ இன மக்கள் பொங்கல் வைத்து, ரஜினிகாந்த் உடல் நலம் வேண்டி வழிபாடு நடத்தியுள்ளனர்.
Recommended Video
101 பானைகளுடன்.. நரிக்குறவ இன மக்கள் வைத்த மாஸ் பொங்கல்.. எல்லாம் ரஜினிக்காக! - வீடியோ

ராமநாதபுரம் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் ராமநாதபுரம் நகர் சார்பாக நடிகர் ரஜினிகாந்தின் ஆரோக்கியத்திற்காக வேண்டிக் கொண்டு, 101 நரிக்குறவ இன மக்களுக்கு சில்வர் பானை மற்றும் மண் அடுப்பு மற்றும் பொங்கல் பொருட்கள் பரிசளித்துள்ளார், ராமநாதபுரம் மாவட்ட, ரஜினி மக்கள் மன்ற செயலாளர் K.செந்தில் செல்வானந்த்.

பின்னர் இவருத தலைமையில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. பின்னணியில் ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களின் பழைய பாடல்கள் ஒலிக்க, அத்தனை பேரும் ஒன்றாக பொங்கல் வைத்து, ரஜினிகாந்த் நலம் பெற வேண்டிக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications