ஆளுநர் ரவியை திடீரென சந்தித்த அஜித் தோவல்.. இலங்கையில் இருந்து நேராக சென்னை வந்தது ஏன்? பரபர தகவல்
சென்னை: தமிழக ஆளுநர் ஆர்என் ரவியுடன் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் திடீரென சந்திப்பு நடத்தி உள்ளார். சென்னை வந்துள்ள அஜித் தோவல் இன்று கிண்டியில் உள்ள ராஜ்பவனுக்கு சென்று ஆர்என் ரவியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
நம் நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் உள்ளார். நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பொறுப்பு என்பதால் இந்த பதவி என்பது மத்திய கேபினட் அந்தஸ்துக்கு நிகரானது. அஜித் தோவல் அடிக்கடி வெளிநாடுகள் செல்வதும், நம் நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று வருவதும் வழக்கமான ஒன்றாகும்.

அந்த வகையில் அஜித் தோவல் இன்று சென்னை வந்தார். அதன்பிறகு அவர் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் ஆர்என் ரவியை சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையின்போது பல்வேறு முக்கிய அம்சங்கள் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் அது எந்த மாதிரியான ஆலோசனை என்பது பற்றிய விபரம் எதையும் ஆளுநர் ஆர்என் ரவி தரப்பிலோ அல்லது அஜித் தோவல் தரப்பிலோ அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் இன்றைய சந்திப்பில் இலங்கை விவகாரங்கள் பற்றி விவாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
அலற விட்ட இந்தியா! அஜித் தோவல் + 2 ரஃபேல் விமானங்கள்! ஷேக் ஹசீனா பாதுகாப்பாக வந்தது எப்படி? பின்னணி
அதாவது தமிழகத்துக்கும், இலங்கைக்கும் கடல்வழி உறவு உள்ளது. மேலும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து படகை பறிமுதல் செய்வது தொடர்ந்து நடந்து வருகிறது. இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி மத்திய அரசுக்கு கடிதம் எழுதி வருகிறார்.
இந்நிலையில் தான் தமிழக மீனவர்கள் பிரச்சனை மற்றும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஏனென்றால் அஜித் தோவல் 2 நாள் பயணமாக கடந்த 29 ம் தேதி இலங்கை தலைநகர் கொழும்பிற்கு சென்றார். இலங்கையில் வரும் செப்டம்பர் 21ம் தேதி அதிபர் தேர்தல் என்பது நடைபெற உள்ளது. இத்தகைய சூழலில் அஜித் தோவலின் இந்த பயணம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
இலங்கையில் 2 நாள் பயணத்தை முடித்து கொண்டு அஜித் தோவல் விமானத்தில் சென்னை வந்திறங்கினார். இலங்கையில் இருந்து அஜித் தோவல் நேரடியாக டெல்லி செல்லாமல் சென்னை வந்து ஆளுநர் ஆர்என் ரவியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். இதனால் இலங்கை மற்றும் தமிழகம் இடையேயான விவகாரங்கள் குறித்து ஆளுநர் ஆர்என் ரவியுடன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆலோசனை மேற்கொண்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications