வணக்கம்டா மாப்ள.. இந்தியாவில் சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பில் மதுரைக்கு 3-வது இடம்!
சென்னை: இந்தியாவின் சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு பிரிவில் மதுரை மாநகராட்சிக்கு 3-வது இடம் கிடைத்திருக்கிறது.
மூன்றாவது தேசிய நீர் விருதுகள் அறிவிக்கும் நிகழ்வு இன்று நடந்தது. இதில் மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உள்ளிட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆண்டுக்கான தேசிய நீர் விருதுகளை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அறிவித்தார். இதில் தமிழகத்துக்கு இரண்டு விருதுகள் கிடைத்திருக்கின்றன. தென் மாநிலங்களில், நீர்வளத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்கான சிறந்த கிராமப் பஞ்சாயத்துக்கான பிரிவில், செங்கல்பட்டு மாவட்டம் வெள்ளப்புத்தூர் ஊராட்சி 2-ம் இடத்தைப் பெற்றிருக்கிறது.
அதேபோல, சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான பிரிவில், மதுரை மாநகராட்சி 3-வது இடத்தைப் பெற்றிருக்கிறது. சிறந்த மாநிலங்கள் பிரிவில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தையும், ராஜஸ்தான் இரண்டாவது இடத்தையும், தமிழகம் மூன்றாவது இடத்தையும் பிடித்திருப்பதாக அமைச்சர் அறிவித்தார்.
இந்தியாவின் தற்போதைய தண்ணீர் தேவை, ஆண்டுக்கு சுமார் 1,100 பில்லியன் கன மீட்டர் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், இது 2050-ம் ஆண்டு வாக்கில், 1,447 பில்லியன் கன மீட்டராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது:

அதேபோல, சிறந்த தொழிற்சாலைகளுக்கான பிரிவில், தமிழ்நாட்டில் உள்ள ஹுண்டாய் கார் தொழிற்சாலைக்கு இரண்டாம் பரிசும், சிறந்த தொண்டு நிறுவன பிரிவில் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா-வுக்கு வழங்கப்பட உள்ளதாக அறிவித்திருக்கிறார்கள்.
இதை தன்னுடைய டிவிட்டரில் தெரிவித்திருக்கிறார் அமைச்சர் ஷெகாவத். அதில், ''இன்று நான் தேசிய நீர் விருதுகள் 2020 வெற்றியாளர்களை அறிவித்தேன். உத்தரப்பிரதேசம் முதலிடத்தையும், ராஜஸ்தான் இரண்டாம் இடத்தையும், தமிழ்நாடு மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மூன்று மாநில முதல்வர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு சிறப்பு நன்றிகளை உரித்தாக்குகிறேன். மாநிலத்தின் நீர் மேலாண்மை குறித்து சரியான தகவல்களை தந்தமைக்கு நன்றி'' என்று டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications