சென்னையில் கிரிக்கெட் விளையாடிய போது விபரீதம்.. பந்து தாக்கி கடற்படை வீரர் சாவு
சென்னை: சென்னை துறைமுகத்தில் கிரிக்கெட் விளையாடியபோது மார்பில் ரப்பர் பந்து தாக்கி கடற்படை வீரர் இறந்தார்.
கிரிக்கெட் விளையாட்டில் பந்துகள் பட்டு மரணம் நிகழ்வது அவ்வப்போது எதிர்பாராதவிதமாக நிகழும். இதேபோல் பந்துகள் பட்டு கிரிக்கெட் வீரர்கள் காயம் அடையும் நிகழ்வும், ஏன் அம்பயர்கள் கூட மரணம் அடைந்த நிகழ்வுகளும் நடந்துள்ளது.

2014-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தெற்கு ஆஸ்திரேலியாவுக்கும், நியூ சவுத் வேல்ஸுக்கும் இடையேயான போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் சீன் அபாட் வீசிய பந்து பௌன்ஸராக எகிரி பிலிப் ஹியூஸின் தலையை பதம்பார்த்தது. இதில் பிலிப் ஹியூஸ் பரிதாமாக இறந்து போனார்.
இதேபோல் இங்கிலாந்து நாட்டில் கடந்த ஜூலை மாதம் நடந்த உள்ளூர் போட்டியில் பந்து தாக்கி அம்பயர் உயிரிழந்தார். இப்படி அடிக்கடி பந்து தாக்கி காயங்களும் மரணங்களும் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் சென்னை துறைமுகத்தில் 5-வது கேட் அருகில் உள்ள கார் பார்க்கிங்கில் இன்று கடற்படை வீரர்கள் உள்பட சிலர் கிரிக்கெட் விளையாடினர். விளையாடிக்கொண்டிருந்த ராஜஸ்தானின் ஜோகேந்திர சிங் என்ற கடற்படை வீரரின் மார்பில் ரப்பர் பந்து வேகமாக வந்து தாக்கியது. இதில் நிலைகுலைந்த ஜோகேந்திர சிங் பரிதாபமாக இறந்த போனார். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
-
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சிலிண்டர் வரலை! ஆப்பம்லாம் பிறகு பார்ப்போம்! Variety rice கிடையாது! சென்னை ஆனந்தா ஹோட்டல் அறிவிப்பு -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம்












Click it and Unblock the Notifications