சென்னையில் கிரிக்கெட் விளையாடிய போது விபரீதம்.. பந்து தாக்கி கடற்படை வீரர் சாவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை துறைமுகத்தில் கிரிக்கெட் விளையாடியபோது மார்பில் ரப்பர் பந்து தாக்கி கடற்படை வீரர் இறந்தார்.

கிரிக்கெட் விளையாட்டில் பந்துகள் பட்டு மரணம் நிகழ்வது அவ்வப்போது எதிர்பாராதவிதமாக நிகழும். இதேபோல் பந்துகள் பட்டு கிரிக்கெட் வீரர்கள் காயம் அடையும் நிகழ்வும், ஏன் அம்பயர்கள் கூட மரணம் அடைந்த நிகழ்வுகளும் நடந்துள்ளது.

Navy man dies while playing cricket in Chennai

2014-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தெற்கு ஆஸ்திரேலியாவுக்கும், நியூ சவுத் வேல்ஸுக்கும் இடையேயான போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் சீன் அபாட் வீசிய பந்து பௌன்ஸராக எகிரி பிலிப் ஹியூஸின் தலையை பதம்பார்த்தது. இதில் பிலிப் ஹியூஸ் பரிதாமாக இறந்து போனார்.

இதேபோல் இங்கிலாந்து நாட்டில் கடந்த ஜூலை மாதம் நடந்த உள்ளூர் போட்டியில் பந்து தாக்கி அம்பயர் உயிரிழந்தார். இப்படி அடிக்கடி பந்து தாக்கி காயங்களும் மரணங்களும் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் சென்னை துறைமுகத்தில் 5-வது கேட் அருகில் உள்ள கார் பார்க்கிங்கில் இன்று கடற்படை வீரர்கள் உள்பட சிலர் கிரிக்கெட் விளையாடினர். விளையாடிக்கொண்டிருந்த ராஜஸ்தானின் ஜோகேந்திர சிங் என்ற கடற்படை வீரரின் மார்பில் ரப்பர் பந்து வேகமாக வந்து தாக்கியது. இதில் நிலைகுலைந்த ஜோகேந்திர சிங் பரிதாபமாக இறந்த போனார். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+