Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பண்ணது ஒரு கல்யாணம்.. பஞ்சாயத்து மட்டும் பத்துக்கு மேல! நயன்தாராவுக்கு எகிறும் பிரஷர்! என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியின் திருமண நிகழ்வு மற்றும் நயன்தாராவின் வாழ்க்கை வரலாறு குறித்து நெட் ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் நயன்தாரா; பியாண்ட் தி பேரி டேல் (Nayanthara: Beyond The Fairy Tale) என்ற பெயரில் ஆவணப் படம் வெளியானது. இந்த படத்தில் அனுமதியின்றி சந்திரமுகி படத்தின் காட்சிகளை பயன்படுத்தி உள்ளதாக ஏபி இன்டர்நேஷனல் வழக்கு தொடர்ந்து இருக்கும் நிலையில் தயாரிப்பு நிறுவனமான டார்க் ஸ்டூடியோஸ் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் நயன்தாராவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு சந்திரமுகி, கஜினி, வல்லவன், பில்லா, யாரடி நீ மோகினி, உள்ளிட்ட படங்களில் ஹீரோயின் ஆகி இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை நயன்தாரா. தமிழில் விஜய், அஜித், ரஜினி, சரத்குமார், சிம்பு, அஜித், ஜெயம் ரவி என சீனியர் ஜூனியர் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு பிரபலமானார்.

பல காதல் சர்ச்சைகளில் சிக்கிய போதும் தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிரபல நடிகரான தனுஷ் தயாரிப்பில் நயன்தாரா விஜய் சேதுபதி நடித்திருந்த நானும் ரவுடி தான் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார்.

Nayanthara Netflix cinema

நயன்தாரா

இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இருவருமே ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இதனால் பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், கடந்த 2022 ஜூன் மாதம் இருவரும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தில் முதல்வர் ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், முக்கிய நடிகர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

நயன்தாரா-விக்னேஷ் சிவன்

சொல்லப்போனால் தமிழகம் முழுவதுமே நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் குறித்த பேச்சுகள் தான் எங்கு பார்த்தாலும் நிறைந்திருந்தது. அப்போது முதல் இப்போது வரை திருமணம் தொடர்பான எந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடாத நயன்தாரா அதனை மொத்தமாக netflix நிறுவனத்திற்கு விற்று விட்டதாக கூறப்பட்டது.

நயன்தாரா ஆவணப்படம்

தொடர்ந்து டார்க் ஸ்டுடியோ என்ற நிறுவனம் நயன்தாரா விக்னேஷ் சிவனின் திருமண ஆவண படத்தை நயன்தாரா; பியாண்ட் தி பேரி டேல் (Nayanthara: Beyond The Fairy Tale) என்ற பெயரில் வெளியிட்டது. கடந்த ஆண்டு நவம்பரில் இந்த ஆவணப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்னதாக தனுஷ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்திருந்த நானும் ரவுடிதான் படத்தின் சில படப்பிடிப்பு காட்சிகள் அதில் இடம்பெற்றது.

நஷ்ட ஈடு

அதற்கு 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு தனுஷ் வழக்கு தொடர்ந்து நிலையில் தனுஷ் நயன்தாரா இடையே வார்த்தை போர் வெடித்தது. அந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அந்த ஆவணப் படத்தில் சந்திரமுகி படத்தின் காட்சிகளை பயன்படுத்தியதாக அதன் உரிமையை வைத்திருக்கும் ஏபி இன்டர்நேஷனல் வழக்கு தொடர்ந்து உள்ளதோடு ஆவணப்படத்தில் இருந்து அந்த காட்சிகளை நீக்க வேண்டும் ஆவணப்படத்தை வெளியிட்ட வகையில் கிடைத்த லாபத்தில் ஐந்து கோடியை வழங்க வேண்டுமென உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

சந்திரமுகி வழக்கு

நேற்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்ற நிலையில் டார்க் ஸ்டுடியோ நிறுவனத்திற்கு பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் அவகாசம் வழங்கி இருக்கிறது. ஏற்கனவே தனுஷ் தரப்பு 10 கோடி கேட்டு இருக்கும் நிலையில் தற்போது இன்னொரு நிறுவனம் 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டிருப்பது நயன்தாராவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+