நெல்லை கவின் ஆணவப் படுகொலை விவகாரம்.. டெல்லியில் இருந்து நெல்லைக்கு வரும் முக்கியப் புள்ளி!
சென்னை: தேசிய பட்டியலின ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா நாளை நெல்லை செல்கிறார். கவின் ஆணவப்படுகொலை தொடர்பாக விசாரிக்க நாளை நெல்லைக்குச் செல்கிறார் கிஷோர் மக்வானா. அதேபோல, புதுக்கோட்டை ஆவுடையார்கோவிலில் பட்டியலின சகோதரர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்தும் நாளை விசாரணை நடத்துகிறார்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கவின் செல்வகணேஷ் (27). இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வந்தார். இவர் அண்மையில் பாளையங்கோட்டை அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கவினை பாளையங்கோட்டையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் தம்பதிகளான சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோரின் மகன் சுர்ஜித் கொலை செய்தது தெரியவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சுர்ஜித்தின் அக்கா சுபாஷினியை, பட்டியலினத்தைச் சேர்ந்த கவின் காதலித்ததால் அவரை சுர்ஜித் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோரையும் சேர்த்தனர். பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமாரியின் பெற்றோர் வீட்டில் தங்கி இருக்கும் சுபாஷினியிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும், புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பகுதியில் இரு பட்டியலின சகோதரர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த இரு நிகழ்வுகளையும் சுட்டிக்காட்டி அம்பேத்கர் மக்கள் இயக்க தலைவர் இளமுருகு முத்து என்பவர் தேசிய பட்டியலின ஆணையத்திற்கு கோரிக்கை மனு அனுப்பியிருந்தார்.
இந்த நிலையில், இந்தச் சம்பவங்கள் பற்றி நேரில் விசாரணை நடத்துவதற்காக தேசிய பட்டியலின ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா நாளை புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் செல்ல உள்ளார். மேலும், நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட கவின் வீட்டிற்கு சென்று அவருடைய பெற்றோரை சந்தித்து விசாரணை நடத்த உள்ளார். அதன் பின்னர், இந்தச் சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications