காவு வாங்க காத்திருக்கிறதா வடசென்னை? திருவொற்றியூர் பள்ளியில் நடந்தது என்ன? NDRF ஆய்வு
சென்னை: வடசென்னை திருவொற்றியூரில் அமைந்துள்ள தனியார் பள்ளி ஒன்றில், வாயு கசிவு காரணமாக மாணவிகள் சிலர் மயக்கமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பள்ளியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
வடசென்னை.. அசல் மெட்ராஸ் என அழைக்கப்படும் இந்த பகுதிதான் தற்போது வாழ தகுதியற்ற இடமாக மெல்ல மெல்ல மாறி வருகிறது. குறிப்பாக, சில நாட்களுக்கு முன்னர் எண்ணூர் பகுதியில் ஏற்பட்ட அமோனியா கசிவு பதற்றம் ஏற்படுத்தியிருந்தது. ஒரே இரவில் நூற்றுக்கணக்கான மக்கள் மூச்சுத்திணறலால் அவதியுற்றனர். விசாரணையில், எண்ணூர் துறைமுகத்திலிருந்து, கோரமண்டல் எனும் உர ஆலைக்கு பைப்லைன் வழியாக அமோனியா அனுப்பப்பட்டபோது அது கசிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

வடசென்னையில் ஏராளமான தொழிற்சாலைகள் அமைந்திருக்கின்றன. சென்னையின் எந்த உயரமான கட்டிடத்திலிருந்த பார்த்தாலும், வடசென்னையை எளிதாக அடையாளம் கண்டுபிடித்துவிடலாம். இங்குள்ள பெட்ரோலிய சுத்திகரிப்பு தொழிற்சாலையின் புகைப்போக்கியிலிருந்து 24/7 நேரமும் நெருப்பு எரிந்துக்கொண்டே இருக்கும். இது வெறும் சாம்பிள்தான். இதைவிட மோசமாக காற்று மாசை ஏற்படுத்தும் ஏராளமான தொழிற்சாலைகள் இங்கு இருக்கின்றன.
இப்படி இருக்கையில் இன்று திருவொற்றியூரில் உள்ள பள்ளி ஒன்றில், வாயு கசிவு காரணமாக மாணவிகள் மயக்கமடைந்துள்ளனர். பள்ளியிலிருந்து வாயு வெளியேறியதால் மாணவிகள் மயக்கமடைந்தார்களா? அல்லது பள்ளியை சுற்றியுள்ள தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறிய வாயுவால் மாணவிகள் மயக்கமடைந்தார்களா? என்பது இப்போதுவரை தெரியவில்லை. மொத்தம் 35 மாணவிகள் வாயு கசிவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், 7 மாணவிகளை தவிர அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளியில் தாசில்தார் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது. மறுபுறம் தேசிய பேரிடர் மேலாண்மை குழு பாதுகாப்பு உபகரணங்களோடு ஆய்வை தொடங்கியுள்ளது. உடன் மத்திய சென்னை எம்பி கலாநிதி வீராசாமி இருக்கிறார். முழுமையான ஆய்வுக்கு பின்னரே வாயு கசிவுக்கான காரணம் என்னவென்று தெரியும் என அவர் விளக்கமளித்துள்ளார்.
மிக்ஜாம் புயலின்போது எண்ணெய் கழிவுகள் மழை வெள்ளத்தில் கலந்தது, அமோனியா கசிவு, இப்போது வாயு கசிவு என தொடர்ந்து வடசென்னையில் அதிர்ச்சி சம்பவங்கள் பல தொடர்ந்து வருகின்றன. எனவே மக்களின் உயிரை பாதுகாக்க.. இனி வரும் நாட்களில், இங்கு இயங்கும் தொழிற்சாலைகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளை சரியாக பின்பற்றுகின்றனவா? என்பது குறித்து உரிய ஆய்வு நடத்தி அதை உறுதி செய்ய வேண்டும் என்றும், விதிகளை பின்பற்றாத ஆலைகளை உடனடியாக மூட வேண்டும் என்றும் வடசென்னை மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
-
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
சென்னைவாசிகளுக்கு மிக பெரிய நிம்மதி.. சீரானது புறநகர் ரயில் சேவை.. வழக்கமான அட்டவணையில் இயக்கம்! -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை! -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications