புரட்டாசியில் 3 வேளையும் சாம்பாரே வச்சா வெங்காய விலை ஏறத்தான் செய்யும்.. நிர்மலா பாணியில் விளக்கம்
சென்னை: இந்தியாவில் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில் அதற்கான காரணத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.
வெங்காயம் உற்பத்தி செய்யப்படும் மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வெங்காய உற்பத்தி கடுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
இதனால் உற்பத்தி + வரத்து இல்லாததால் அதன் விலை ரூ 80 வரை சென்றுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து நெட்டிசன்கள் கூறியுள்ள கருத்துகளை பார்ப்போம்.
|
விலை ரூ. 100
வெங்காயம் 70 இல்ல 100
கூட போகலாம்,விலைக்கேற்ப
தேவையை மக்கள் குறைத்து
கொள்வார்கள்,
ஆனால் இந்தமாதமும் அரசு
புள்ளியல்துறை விலைவாசி
கட்டுக்குள் இருக்கிறது,
எனகூறும்போதுதான் நமக்கு
"கடுப்பாய நமக" வாகும்.
|
கண்கலங்கி
தெனமும் உன்னால் ஒரு முறையேனும் கண் கலங்கி விடுகிறேன்..😪
|
கிடுகிடு
வெங்காய விலை கிடுகிடு உயர்வு,
டேய் விடு.! விடு..! அவனும் நம்ம பயதேன் 😂
|
மக்கள் அதிருப்தி
வெங்காயம் விலை 'கிடுகிடு'வென உயர்ந்து,
கிலோ, 70 ரூபாய்க்கு விற்பனை!
மக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்துள்ளது
ஏற்கனவே வெங்காய விலை உயர்வால் BJP அரசுகள் கவிழ்ந்த வரலாறும் உண்டு
எனவே
சட்டசபை தேர்தல், இடைத்தேர்தல்களில், வெங்காயம் விலை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால்
BJP பீதி!
|
சாம்பார்
புரட்டாசி மாசத்தில் எல்லோரும் மூணு வேளையும் சாம்பார் வைப்பதால் தான் வெங்காய விலை ஏறி உள்ளது.
ரசம் வைத்தால் வெங்காய விலை ஏறாது.












Click it and Unblock the Notifications