வாழ்வாதாரத்தையும் இருப்பையும் தேடி அகதியாய் அலையும் சின்னத்தம்பி.. நெட்டிசன்கள் வேதனை #சின்னத்தம்பி
Recommended Video

சென்னை: வாழ்வாதாரத்தை அழித்துவிட்டதால் வாழ்வையும் இருப்பிடத்தையும் தேடி சின்னத்தம்பி அகதியாய் அலைகிறான் என நெட்டிசன்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றிதிரிந்த சின்னதம்பி காட்டு யானை நீண்ட போராட்டத்திற்கு பிறகு பிடிக்கப்பட்டு, கோவை மாவட்டம் டாப்சிலிப் வனப்பகுதியில் நான்கு நாட்களுக்கு முன்பு விடப்பட்டது.
இந்த நிலையில் 100 கிலோ மீட்டர் தூரம் நடந்தே மீண்டும் கோவைக்குள் வந்துவிட்டான் சின்னத்தம்பி. இவனை கும்கியாக மாற்ற வேண்டாம் என் பெரும்பாலானோர் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்த நிலையில் சின்னத்தம்பிக்கு ஆதரவாக நெட்டிசன்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
|
கொம்பன்
கும்கியாக மாற்றுவதற்கு பல வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகலாம்., கோபமடைந்து #கொம்பனாக மாற ஒரு நொடி போதும்
|
காட்டு விலங்கு
#சின்னத்தம்பி யானை நமக்கெல்லாம் ஒரு பாடம். இனியாவது யானைகளை காட்டிலேயே இருக்க விடவேண்டும். மனிதர்கள் நடத்தும் பண்டிகைகளில் ஆயிரக்கணக்கில் கொண்டு வந்து நிறுத்தி கொடுமைப் படுத்தக்கூடாது. காட்டு விலங்கு காட்டிலேயே இருக்கட்டும்.
|
அகதி
வாழ்வாதாரத்தை"அழித்து"விட்டார்கள்! தன்"வாழ்வை"யும் தன்"இருப்பை"யும் தேடி அலையும்"அகதி"யாய் #சின்னத்தம்பி
|
வாழிடம் இழந்து
திக்குதெரியாமல் திரிகின்றேன்.
என் வாழிடம் இழந்து...
என்னையும் காடு கடத்தி இப்போது பிடித்து கும்கியாக மாற்ற போறார்களாம்...
#என்னை காப்பாற்றுங்கள்..
," நான் உங்கள் பிள்ளைகள் வாழ வனவளம் காக்கின்றேன் "
#சின்னத்தம்பி.
#Stop kumki operation
|
காடு
வரும் காலங்களில் #நிலப்பகுதியில் இருக்கும் சிலரை காட்டிற்கும், காட்டில் இருப்பதை நிலப்பகுதிக்கும் அனுப்பலாம்,
#அறிவு (வளர்ச்சி&வீழ்ச்சி)......
|
சின்னத்தம்பி ஆட்டம்
#சின்னத்தம்பி ஆட்டம் காட்டறன்












Click it and Unblock the Notifications