என்னாது.. காமராஜர் கட்டிய பள்ளியில் அப்துல் கலாம் படித்தாரா? சீமான் பேச்சை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காமராஜர் கட்டிய பள்ளியில் படித்துதான் மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் படித்து பெரிய விஞ்ஞானியானார் என்று சீமான் பேசிய நிலையில், காமராஜர் முதல்வராக பொறுப்பேற்ற ஆண்டே அப்துல் கலாம் கல்லூரி படிப்பை முடித்துவிட்டார் என்று கூறி சீமானின் பேச்சை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.

காமராஜரின் பிறந்தநாள் விழாவை ஒட்டி சென்னை அடுத்த பம்மலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார். அப்போது காமராஜர் கட்டிய பள்ளியில் படித்துதான் மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் படித்து பெரிய விஞ்ஞானியானார் என்று பேசினார். சீமான் பேசியதாவது:-

netizens-slam-seeman-over-remark-on-kalam-studying-in-kamaraj-built-school

காமராஜர் பள்ளியில் அப்துல்கலாம் படித்தார்

மூதறிஞர் ராஜாஜி 6,000 பள்ளிகளை மூடினார்.. காசு இல்லை என்று கூறி அந்த பள்ளிகளை மூடினார். ஆனால் மூடிய அந்த 6,000 பள்ளிகளையும் திறந்து வைத்தவர் காமராஜர். அதற்கு மேலேயும் 14,000 பள்ளிகளை திறந்து நம்மளை எல்லாம் படிக்க வைத்தார். இங்கே மேடையில் இருப்பவர்களும் சரி.. நானும் சரி.. எல்லாருமே அவர் திறந்த பள்ளியில் தான் படித்தனர். அதை இல்லை என யாரும் மறுக்க முடியாது.

அப்துல்கலாம் வந்து படித்து அறிவியல் விஞ்ஞானியாகி, அனுகுண்டு கண்டுபிடித்து வெடித்து காண்பித்து, இந்திய வல்லாதிக்கம் பெற்ற நாடாக ஆகியதாக பெருமைப்பட வேண்டும் என்றால் அதற்கு காமராஜர் திறந்த பள்ளியினால் என்பதே.. அவர் பள்ளிக்கூடம் திறந்தது அவரது சாதிக்கு மட்டும் என்று இல்லையே.. இவ்வாறு அவர் பேசியிருந்தார். இந்த நிலையில் சீமானின் இந்த பேச்சுக்கு நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

சீமானின் பேச்சை விமர்சித்த நெட்டிசன்ஸ்

அதாவது, காமராஜர் முதல்வராக பொறுப்பேற்ற ஆண்டே அப்துல் கலாம் கல்லூரி படிப்பை முடித்துவிட்டார் என்றும், அப்படி இருக்கையில் காமராஜர் கட்டிய பள்ளியில் அப்துல் கலாம் எப்படி படித்து இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் சிலர் காமராஜர் காமராஜர் முதலமைச்சர் ஆனது 1954 ஆம் ஆண்டு என்றும், ஆனால் அப்துல் கலாம் பிறந்தது 1931 ஆம் ஆண்டு என்றும், எனவே இப்படி இருக்கும் போது 20 ஆண்டுகளாக அப்துல் கலாம் படிக்காமலா இருந்தார் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இப்படியே நெட்டிசன்கள் பலரும் சீமானின் பேச்சை விமர்சித்து வருகிறார்கள்.

காமராஜர் மறைவுக்கு அதிகம் அழுத அண்ணா

இதேபோல, காமராஜர் மறைவுக்கு அதிகம் அழுதது அண்ணா என்று சீமான் பேசியதும் பேசுபொருளானது. மு.க முத்து மறைவுக்கு அவரது சகோதரர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆறுதல் கூறிய சீமான் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "முதல்வர் ஸ்டாலினும் நானும் வேறு வேறு பாதையில் பயணித்தாலும் இருவருக்கும் இடையே இன்னும் உறவு நீடிக்கிறது. காமராஜர் மறைவுக்கு அதிகம் அழுதது அண்ணா என்பார்கள்" என்று பேசினார்.

முன்னாள் முதல்வர் அண்ணா கடந்த 1969 ஆம் ஆண்டு மறைந்த நிலையில், காமராஜர் இறந்தது 1975 ஆம் ஆண்டு அகும். காமராஜர் உயிரிழப்பதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பே அண்ணா மறைந்துவிட்ட நிலையில், அவர் எப்படி அழுது இருக்க முடியும் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர். எந்த குறிப்பும் இன்றி எவ்வளவு நேரம் வேண்டும் ஆனாலும் பேசக்கூடிய ஆற்றல் கொண்ட சீமானிடம் இதை எதிர்பார்க்கவில்லை எனவும் நெட்டிசன்கள் பதிவிட்டு வந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+