வந்தார் மீண்டும் மோடி.. இனி ஹைட்ரோ கார்பன்.. நியூட்ரினோ.. 8 வழிச்சாலை... வேகம் எடுக்குமோ!
சென்னை: மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி மீண்டும் அமைத்துள்ளதால் ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ திட்டம், சென்னை-சேலம் எட்டுவழிச்சாலை இனி எந்த தடையும் இல்லாமல் தமிழகத்தில் நிறைவேற்றப்படும் என தெரிகிறது.
தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களிலும், விழுப்புரம் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் சுமார் 42 இடங்களில் ஹைட்ரோ கார்பன் ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு தேர்தல் முடிந்த உடன் அனுமதி அளித்துள்ளது.
இதில் இருந்தே மத்தியில் மீண்டும் தாங்கள் தான் ஆட்சிக்கு வரும் என பிரதமர் மோடி உறுதியாக நம்பி உள்ளார். எனவே நிச்சயம் காவிரி டெல்டாவில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான ஆய்வு எந்த தொய்வும் இல்லாமல் இனி நடக்கும்.

சுற்றுச்சூழல் பிரச்னை
தமிழகத்தில் நியூட்ரினோ திட்டம் துணைமுதல்வர் ஓபிஎஸ்சின் சொந்த தொகுதியான போடி அருகே பொட்டிபுரம் மலையில் நடக்க உள்ளது. இந்த திட்டத்தை துவக்கிய மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு கொண்டுவந்தாலும், பாஜக அரசு செயல்படுத்த முயன்று வருகிறது. ஆனால் சுற்றுச்சூழல் அனுமதி பிரச்னை காரணமாக இத்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ளது. இந்த திட்டமும் இப்போது நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளது.

நிச்சயம் நிறைவேறும்
சென்னை-சேலம் இடையேயான 8 வழிச்சாலை திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி சேலத்தில் நடந்த பிரச்சாரத்தில் தெரிவித்தார். முதல்வர் பழனிச்சாமியை வைத்துக்கொண்டுதான் அப்போதுஅவர் கூறினார். இப்போது தேர்தல் முடிந்து அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளதால் நிச்சயம் சென்னை சேலம் இடையே 8வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளது.

அதிமுக கடும் எதிர்ப்பு
இதில் நியூட்ரினோ திட்டத்திற்கு ஆளும் அதிமு அரசே எதிர்ப்பு தெரிவித்துவருவதடன், பக்கத்து மாநிலமான கேரளாவும் இதற்கு ஒப்புதல் தரவேண்டும் என்கிற உள்ளது. இதேபோல் 8வழிச்சாலை திட்டத்திற்கு பாஜக கூட்டணியில் உள்ள பாமக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

ஆய்வு மட்டுமே
இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக 2 நாட்களுக்கு முன்பு பேசிய பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை பொறுத்தவரை திமுக தலைவர் ஸ்டாலின் சோதனை மேற்கொள்ள கையெழுத்திட்டதைப் போல நாங்களும் சோதனை செயது வருகிறோம். மக்களுக்கு விருப்பம் இல்லாவிட்டால் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடும் என்றார். ஆனால் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் பெட்ரோலுக்கு மாற்றான இந்த ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அவ்வளவு எளிதில் மத்திய அரசு கைவிடாது என்கிறார்கள். ஒருவேளை ஹைட்ரோ கார்பன் ஆய்வு வெற்றி பெற்றால் தங்க முட்டை இடும் வாத்து என்பதால் நிச்சயம் திட்டம் நிறுத்தப்பட வாய்ப்பே இல்லை.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications