அடுத்த இன்னிங்ஸ்.. வங்கக்கடலில் இன்று உருவாகும் தாழ்வு பகுதி- தமிழ்நாட்டில் எங்கு மழை பெய்யும்?
சென்னை: தென் மேற்கு வங்கக்கடலில் இன்று உருவாகிறது புதிய தாழ்வு பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தொடர்ந்து அடுத்தடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் தாக்கி வருகின்றன. இதனால் வடகிழக்கு பருவமழை இந்த முறை எதிர்பார்த்ததை விட அதிகமாக பெய்து வருகிறது.
இதுவரை தமிழ்நாட்டை இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் தாக்கிவிட்டன. அதேபோல் ஒரு வழிமண்டல மேலடுக்கு சுழற்சியும், தாழ்வு மண்டலமும் கடுமையான கனமழையை தமிழ்நாட்டிற்கு கொடுத்தது.

தாழ்வு பகுதி
இந்த நிலையில்தான் தென் மேற்கு வங்கக்கடலில் இன்று உருவாகிறது புதிய தாழ்வு பகுதி என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய நிலநடுக்கோட்டு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இதனால் வடகிழக்கு பருவக்காற்று வேகமாக வீசும். காற்றின் வேகம் 50 கிமீ வரை செல்ல கூடிய வாய்ப்பு உள்ளது.

தென் மாவட்டம்
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்றிலிருந்து தென் மாவட்டங்களில் மழை தீவிரம் எடுக்கும். இன்றும், நாளையும் டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அடுத்த சில நாட்களுக்கு தென் கடலோர மாவட்டங்கள் அதிக அளவு மழையை இதனால் பெறும்.

காற்று
இன்று முதல் வரும் 20ம் தேதி வரை குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும், கொஞ்சம் ஆக்ரோஷமாக இருக்கும். காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சேதம்
கடந்த மாதம் முழுக்க பெய்த மழையால் வடமாவட்டங்கள் அதிகம் பாதித்தன. ஆனால் அந்த அளவிற்கு இந்த முறை வடமாவட்டங்கள் பாதிக்காது, மாறாக இந்த தாழ்வு பகுதி காரணமாக தென் மாவட்டங்களில் அதிக அளவு மழை எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையை பொறுத்த வரை வானம் மேக மூட்டத்தோடு காணப்படும்.












Click it and Unblock the Notifications