குடிச்சிட்டு வண்டி ஓட்டுறவங்க பின்னாடி உட்கார்ந்து போனாலும் இனி அபராதம்.. இன்று முதல் அமலாகிறது!
சென்னை: திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் அடிப்படையில் இன்று முதலே அபராதம் வசூலிக்கப்படும் என சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.
மோட்டார் வாகன சட்டத்தின் திருத்தப்பட்ட விதிமுறையின்படி 28ஆம் தேதி அபராதத் தொகை வசூலிக்கப்படும் என முதலில் தெரிவித்திருந்தது. தற்போது இந்த நடைமுறை இன்று முதலே அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறையின் படி போதையில் வாகனம் ஓட்டுபவரிடம் அபராதம் வசூலிக்கப்படும். அத்துடன் அவரது பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் அபராதம் விதிக்கப்படும்.

திருத்தப்பட்ட சட்டம்
திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின்படி அபராதமானது பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாமல் வாகனங்களை ஓட்டுவது உள்பட போக்குவரத்து விதிகளை மீறினால் ரூ 1000 முதல் ரூ 10000 வரை அபராதம் வசூலிக்கப்படும்.

புதிய மோட்டார் வாகன சட்டம்
திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டம் மற்றும் தண்டனைகள் குறித்து உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரப்பட்டியலின்படி 44 வகையான அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன. இதில் முதல் முறை விதியை மீறினால் ஒரு அபராதமும் இரண்டாவது முறையும் மீறினால் ஒரு அபராதமும் விதிக்கப்படும்.

மேற்கூரை பயணம்
உதாரணமாக வாகனத்தின் மேற்கூரை மற்ற இடங்களில் பயணம் செய்தால் முதல் முறை ரூ 500, இரண்டாவது முறை ரூ 1500 அபராதம் வசூலிக்கப்படும். உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டினாலோ அல்லது உரிமம் இல்லாமல் நடத்துநர் பணிக்கு சென்றாலோ ரூ 10000 அபராதம் வசூலிக்கப்படும். அதிவேகமாக வாகனத்தை இயக்கினால் ரூ 1000 அபராதம் வசூலிக்கப்படும்.

பந்தயம்
பொது சாலைகளில் வாகன பந்தயம் போல வேகமாக இயக்கினால் ரூ 5000 வசூலிக்கப்படும். வாகனங்களை மீறி சுமைகள் வெளியில் நீண்டு இருந்தால் ரூ 20000 அபராதம் வசூலிக்கப்படும். ஆம்புலன்ஸ் தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிடாவிட்டால் ரூ 10000 அபராதம் விதிக்கப்படும்.

செல்போன் பேசி வாகனம் ஓட்டுதல்
பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள வாகனங்களை விற்பனை செய்தால் ரூ 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். விதிகளுக்கு புறம்பாக வாகனங்களில் பாகங்களை மாற்றுவது ஒவ்வொரு மாற்றத்திற்கும் ரூ 5000 அபராதம் வசூலிக்கப்படும். ஆபத்தான முறையில் வாகனத்தை ஓட்டுவது செல்போனில் பேசிக் கொண்டே வாகனத்தை இயக்குவது என கண்டறியப்பட்டால் ரூ 1000 அபராதம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி












Click it and Unblock the Notifications