விசிக அலுவலகத்திற்கு சோபா ஏன் வந்தது? காரணம் இதுதான்! திருமாவளவன் சொன்ன விளக்கம்!
சென்னை: தவெகவுக்கு ஆதரவளிப்பது தொடர்பான முடிவு எடுக்கும் நிலையில் விசிக இருந்தபோது, அக்கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு புதியதாக சோபா வந்திருந்தது. இது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருந்த நிலையில் இது குறித்து திருமாவளவன் தற்போது விளக்கமளித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் தேர்தலில் பெரிய வெற்றி பெற்றிருந்தாலும், தனிப்பெரும்பான்மை பெறவில்லை. எனவே விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளிடம் விஜய் கூட்டணிக்கு அணுகியிருந்தார்.

இந்த கூட்டணி குறித்து முடிவை விசிக எடுக்க இருந்த நேரத்தில், விசிக அலுவலகத்திற்கு புதியதாக சோபா ஒன்று வந்தது. இது குறித்து பலரும் கேள்விகளை எழுப்பியிருந்தனர். இந்நிலையில், ஏற்கெனவே ஆர்டர் செய்யப்பட்ட சோபாதான் தற்போது வந்திருக்கிறது என்று திருமாவளவன் விளக்கம் அளித்திருக்கிறார்.
மேலும் அவர் பேசியதாவது, "நாங்கள் தவெக கூட்டணிக்கு ஆதரவு கொடுக்க தாமதமானது குறித்து பலரும் பல கருத்துக்களை கூறியிருந்தார்கள். தவெகவுடன் பேரம் பேசத்தான் இந்த தாமதம் என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி பேசியிருந்தார். ஆனால் இடதுசாரிகள் கட்சிகள் எடுக்கிற முடிவை ஒட்டி, எங்கள் கட்சியின் உயர்நிலை குழுவில் விவாதித்து முடிவெடுப்போம் என்று சொல்லியிருந்தேன். அதல் எந்த தடுமாற்றமும் எங்களுக்கு இல்லை.
எனவே, அவர்கள் முடிவெடுத்து எங்களுக்கு சொன்னதை நாங்கள் எங்கள் உயர்நிலை குழுவில் விவாதித்திருந்தோம். எனவேதான் தாமதம் ஏற்பட்டிருந்தது.
சோபா விவகாரத்தை பொறுத்தவரை, நாங்கள் ஆர்டர் செய்திருந்தோம். அது வந்தபோது அதே நேரத்தில் செய்தியாளர்களும் வந்திருந்தார்கள். எனவே இது எதிர்பாராத நிகழ்வுதான்.
அதேபோல என்னை முதலமைச்சராக அமர வைக்க முயன்றதாக பேச்சுகள் அடிபடுகின்றன. ஆனால் அதைப்பற்றி எனக்கு தெரியாது" என்று கூறியிருந்தார். முன்னதாக அதமுக எம்எல்ஏ சி.வி.சண்முகம், திருமாவளவனை முதலமைச்சராக அமரவைக்க முயற்சிகள் நடந்ததாகவும், அதை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications