சிசிடிவி பதிவெல்லாம் ஒரு மாசத்துக்குதான் இருக்கும்.. எல்லாம் எங்களுக்கு தெரியும்.. சுரேஷ் ஷாக் தகவல்
வாக்குமூலத்தில் பல தகவல்களை சொல்லி வருகிறான் சுரேஷ்
Recommended Video
சென்னை: "நிறைய ஹாலிவுட் படங்கள் பார்ப்போம்.. கடைகளை நோட்டமிடுவோம்.. ஒரு மாசத்துக்கு அப்பறம் சிசிடிவி பதிவு எல்லாம் தானா அழிஞ்சிடும் தெரியுமா" என்று போலீசாரையே திகைத்து வைத்து கொண்டிருக்கிறார்கள் கொள்ளையன் முருகனும், சுரேஷூம்!
லலிதா ஜுவல்லரி கொள்ளை விவகாரத்தில், நாட்கள் கடந்து கொண்டே இருந்த நிலையில், மூளையாக இருந்த முருகனையும், உடன் செயல்பட்ட சுரேஷையும் போலீசார் பிடிக்கவே முடியவில்லை.
ஆனால், சுரேஷின் அம்மா, தம்பி என குடும்பத்தாரை விசாரணை வளையத்துக்குள் நம் போலீசார் கொண்டு வருவார்கள் என்று முருகனும், சுரேஷும் எதிர்பார்க்கவே இல்லை.

சரண்
அதனால்தான் முருகன் பெங்களூர் கோர்ட்டிலும், சுரேஷ் செங்கம் கோர்ட்டிலும் சரணடைந்தனர். இவர்களிடம் விசாரணை தினமும் நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தகவலும் வெளிவந்த வண்ணம் உள்ளன. அப்படி சுரேஷிடம் வெளிவந்த கூடுதல் தகவல்கள்தான் இவை:

சிசிடிவி
"கொள்ளையடிக்கும் இடத்தை முதலில் முடிவு செய்துவிடுவோம். அப்பறம் கஸ்டமர்களை போல உள்ளே கடைக்குள்ளே போவோம். அப்படியே ஒரு நோட்டமிடுவோம்.. திரும்ப ஒரு மாசத்துக்கு அந்த பக்கம் போக மாட்டோம்.. ஏன்னா, எங்க முகம், அங்க இருக்கிற சிசிடிவி கேமராவில் பதிந்திருந்தால் நாங்க மாட்டிப்போம்.

ஹாலிவுட்
பொதுவாக, சிசிடிவி கேமராவில் ஒரு மாசத்துக்கு அப்பறம் பதிஞ்சு போனது எல்லாமே தானா அழிஞ்சிடும். அதனால்தான் ஒரு மாசத்துக்கு நோட்டம் போட்ட கடை பக்கம் போக மாட்டோம். நிறைய ஹாலிவுட் படங்கள் பார்த்துவிடுவோம். எங்க அடையாளத்தை மறைக்கதான், மிக்கி மவுஸ் மாஸ்க், கிளவுஸ் இப்படி போட்டுக்கிட்டு கொள்ளை அடிச்சது எல்லாமே ஹாலிவுட் படங்களை பார்த்துதான்.

கயிறு சிக்னல்
செல்போன் பயன்படுத்தினால் டிரேஸ் செய்துவிடுவார்கள்.. அதனால் வாக்கி டாக்கி யூஸ் பண்ணினோம்.. அப்பறம் அதையும் கண்டுபிடிச்சிடுவாங்கன்னு கயிறு டெக்னிக் யூஸ் பண்ணினோம். இடுப்பில் கயிறு கட்டிக் கொண்டு சிக்னல் தந்து கொள்ளை அடித்தோம்.

மிஷின்கள்
முதலில் இடுப்பை கயிற்றை கட்டி, உள்ளே நுழைவது முருகன்தான்.. வெளியில் இருந்து கயிறு மூலமாக சிக்னல் கிடைத்து கொண்டே இருக்கும். சுவர்களை ஓட்டை போடுவதில் முருகன் கில்லாடி. ஆனால் சுவரை உடைக்க ஹைடெக் மிஷினைதான் பயன்படுத்துவோம்" என்கிறான் சுரேஷ்.
-
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு -
"முதல்ல பணத்தை எடுத்து வை.." ஹார்முஸை கடக்க சுங்க கட்டணம்.. மாஸ்டர் பிளான் போட்டு தூக்கிய ஈரான் -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
சவால் விட்ட செங்கோட்டையன் அதிர்ச்சி.. எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரே இல்லாததால் கடும் அப்செட்! -
சரியான நேரத்தில் எச்சரித்த ஆனந்த் சீனிவாசன்... சட்டென எகிறிய தங்கம் விலை.. இனி என்ன நடக்கும்? -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
உன்னை கட்சியில் வைத்திருந்தால்.. அதிமுகவையே விற்றுருப்பாய்.. ஓபிஎஸ்ஸை தரக்குறைவாக பேசிய எடப்பாடி!












Click it and Unblock the Notifications