அப்பாடா.. மாணவர்கள் எதிர்ப்பால் பணிந்த தேசிய மருத்துவ ஆணையம்.. NExT தேர்வு காலவரையின்றி ஒத்திவைப்பு
சென்னை: நெக்ஸ்ட் தேர்வுக்கு மருத்துவ மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், நெக்ஸ்ட் தேர்வு மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.
இளநிலை மருத்துவ படிப்பு முடித்த மாணவர்கள் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு 'பி.ஜி. நீட்' என்கிற தேர்வை எழுதி வந்தனர். இதற்கு அதற்கு மாற்றாக தேசிய மருத்துவ ஆணையம் 'நெக்ஸ்ட்' எனப்படும் புதிய தேர்வு முறை அறிமுகம் செய்யப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்ததது. அதாவது, எம்.பி.பி.எஸ் முதுநிலை படிப்புக்கான நீட் தேர்வு மற்றும் வெளிநாடுகளில் மருத்துவம் பயில்வதற்கான தகுதி தேர்வு ஆகியவற்றை ஒருங்கிணைத்து நெக்ஸ்ட் எனப்படும் தேசிய தகுதிதேர்வினை நடத்த தேசிய மருத்துவ ஆணையம் திட்டமிட்டு இருந்தது.

கடந்த 2019 ஆம் ஆண்டு பேட்ச் மாணவர்களுக்கு இந்த ஆண்டு நெக்ஸ்ட் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு மருத்துவ மாணவர்கள் தரப்பில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினும் கடந்த மாதம் NExT தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அதில், "மருத்துவ மாணவர் சேர்க்கையில், நீட் தேர்வு ஏற்கெனவே மோசமான பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில், NExT தேர்வை அறிமுகப்படுத்துவது கிராமப்புற மற்றும் சமூகரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கும், மாநில அரசின் கீழ் இயங்கும் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதால், NExT தேர்வு முறையினைக் கைவிட வேண்டுமென்றும், தற்போதுள்ள முறையே தொடர வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். எனினும் நெக்ஸ்ட் தேர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.
நெக்ஸ்ட் தேர்வுக்கு தொடர்ந்து பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், 28 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த நெக்ஸ்ட் தேர்வு(Mock Test) தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கான காரணம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. மத்திய சுகாதாரத்துறையிடம் இருந்து அடுத்த அறிவுறுத்தல் வரும் வரை தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ராய்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை நிகழ்ச்சியில் கடந்த 6 ஆம் தேதி பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா, நெக்ஸ்ட் தேர்வு அடுத்த ஆண்டு முதல் தான் நடைபெறும் 2019 பேட்ச் மாணவர்களுக்கு நடத்தப்படாது என்று பேசியிருந்தார். இதனால் மருத்துவ மாணவர்கள் மத்தியில் குழப்பம் நிலவிய நிலையில் தற்போது தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications