Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிகாலையிலேயே அதிரடி.. சென்னை, புதுக்கோட்டை, கன்னியாகுமரியில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் ரெய்டு.. பரபர

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் 10 இடங்களிலும், நாகர்கோவிலில் ஒரு இடத்திலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.. சென்னை, கன்னியாகுமரி மற்றும் புதுக்கோட்டையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆள் சேர்த்தது தொடர்பான வழக்கை, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வந்தனர்...

nia officers raid

விசாரணை: இதனிடையே, இந்த வழக்கு என்ஐஏ விசாரணைக்கு மாற்றப்பட்டதையடுத்து, வழக்கு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைப்பற்றி வைத்திருந்த ஆவணங்கள் அனைத்தும், என்.ஐ.ஏ அதிகாரிகளிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில், சென்னை ராயப்பேட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட "ஹிஸ்புத் தஹ்ரிர்" என்ற அமைப்புக்கு ஆதரவாக ஆள்சேர்ப்பில் ஈடுபட்டதாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் 6 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்திருந்தனர்.

6 பேர் ஏற்கனவே கைது: டாக்டர் ஹமீது உசேன், அவருடைய அப்பா மன்சூர், அவருடைய சகோதரர் அப்துல் ரஹ்மான், நண்பர்கள் முகமது மாரிஸ், காதர் நவாப் ஷெரீப், முகமது அலி உமாரி ஆகிய 6 பேரையும் பயங்கரவாத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்திருந்தனர்.

இப்படிப்பட்ட சூழலில், சென்னையில் இன்று 10 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.. நாகர்கோவிலில் ஒரு இடத்திலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்..

பரபரப்பு: சென்னையில் தாம்பரம், கன்னியாகுமரி, புதுக்கோட்டையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், இந்த வழக்கு தொடர்பான சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகத்தின் பல்வேறு இடங்களில், அதுவும் காலையிலேயே என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சென்னையில், ராயப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, திருவல்லிக்கேணி, ஏழுகிணறு, நீலாங்கரை, வெட்டுவாங்கேணி மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம், வண்டலூர், நன்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த ரெயிடு நடக்கிறது.. நீலாங்கரை வெட்டுவாங்கேணி குறுக்குத்தெருவில் முகமது ரியாஸ் என்பவரது வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். அதேபோல, தாம்பரம் காவல் ஆணையரக பகுதிகளில் 3 இடங்களிலும், பெரும்பாக்கம் உள்ளிட்ட 3 இடங்களிலும் சோதனை நடந்து கொண்டிருக்கிறது.

காரணம் என்ன: பல நாடுகளில் தடை செய்யப்பட்ட ஹிஷாப் உத் தஹீரிர் அமைப்பிற்கு ஆள் சேர்த்தது தொடர்பான வழக்கில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது.. எனினும், இன்று அதிகாலை முதலே என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது மிகப்பெரிய கவனத்தை பெற்று வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+