ஹவாலா பணம்! தமிழகம் உள்பட 7 மாநிலங்களில்.. 17 இடங்களில்.. என்ஐஏ ரெய்டால் பரபரப்பு!
சென்னை: தமிழகம், கேரளா, கர்நாடகா உள்பட 7 மாநிலங்களில் 17 இடங்களில் தேசிய புலனாய்வு முகமையை சேர்ந்த அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூர் குண்டனஹள்ளி பகுதியில் உள்ளது ராமேஸ்வரம் கஃபே. இங்கு வெள்ளிக்கிழமை (மார்ச் 1) மதியம் 1 மணியளவில் பயங்கர வெடி சப்தம் கேட்டது. அங்கிருந்தவர்கள் ஓடி போய் பார்த்த போது உணவகத்தின் முன்பகுதி சேதமடைந்தது. அங்கு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.

இந்த சம்பவத்தில் உணவகத்தில் இருந்தவர்கள் சிலர் காயமடைந்தனர். அவர்கள் ப்ரூக்ஃபீல்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார் விரைந்தனர். தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் 10 பேர் காயமடைந்ததாக தெரிகிறது. முதலில் சிலிண்டர் வெடிப்பாக இருக்கும் என கருதப்பட்ட நிலையில் குண்டுவெடிப்புதான் என உறுதியானது. அதிலும் மாஸ்க், மஃப்ளர் அணிந்த நபர் அங்கு வந்து ரவா இட்லி சாப்பிட்டுவிட்டு ஒரு பார்சலை அந்த ஹோட்டலின் அருகே உள்ள குப்பைத் தொட்டியில் வைத்துவிட்டு சென்றார்.
அது ஒரு மணி நேரம் கழித்து வெடித்தது. சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து அந்த நபரை தேடும் பணிகள் நடக்கின்றன. ஆயினும் இதுநாள் வரை குண்டுவெடிப்புக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக துப்பும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இந்த வழக்கானது தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலுக்கு சென்ற என்ஐஏ அதிகாரிகள், மத்திய உளவுத் துறை அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தினர். மேலும் சென்னை, ராமேஸ்வரம் உள்பட தமிழகத்தின் 4 இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
பெங்களூர் சிறையில் உள்ள தீவிரவாதியின் வங்கிக் கணக்கிற்கு ரூ 1 லட்சம் ஹவாலா பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த நஷீர், சிறை கைதிகளை மூளைச்சலவை செய்து தீவிரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து சென்னை ஏழுகிணறு பகுதியில் ஒரகு வீட்டில் பதுங்கி இருந்த 5 பேரை என்ஐஏ அதிகாரிகள் பிடித்து சென்றனர்.பெங்களூர் சிறை கைதிகளை தீவிரவாத இயக்கத்தில் சேர்த்த வழக்கு தொடர்பாக 7 மாநிலங்களில் என்ஐஏ சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications