கவரைப்பேட்டை ரயில் விபத்து: சதிவேலையால் 95 இணைப்பு கம்பிகள் அகற்றமா? என்.ஐ. ஏ. விசாரணையால் பகீர்!
சென்னை: தமிழ்நாட்டின் சென்னை அருகே கவரைப்பேட்டையில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி நிகழ்ந்த பயங்கர விபத்துக்கு நாசவேலை காரணமாக இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேசியப் புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் (NIA என்.ஐ.ஏ.) விசாரணை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சரக்கு ரயில் நின்றிருந்த தண்டவாளம் மற்றும் பயணிகள் ரயில் பிரியும் இடத்தில் சிதறிக் கிடந்த போல்ட், நட்டுகள், 95 இணைப்பு கம்பிகள் அகற்றப்பட்டிருப்பது ஆகியவற்றின் பின்னணியில் சதி இருக்கிறதா? என்பது குறித்தும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை அருகே கவரைப்பேட்டையில் ஆந்திரா மாநிலம் கூடுரை நோக்கிச் சென்ற பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது நேற்று முன்தினம் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் ரயில் பெட்டிகள் சிதறிக் கிடந்த அலங்கோலம் பார்ப்பவர் நெஞ்சை திடுக்கிட வைக்கும்.

பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் 1700 பயணிகள் பயணித்த நிலையில் இந்த விபத்து நிகழ்ந்தது. இதில் 19 பேர் படுகாயமடைந்தனர். அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மீட்புப் படையினரின் துரித நடவடிக்கையால் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இதனையடுத்து சிதறிக்கிடந்த ரயில் பெட்டிகள் ஒவ்வொன்றாக அகற்றப்பட்டு அப்பகுதியில் ரயில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டுள்ளது.
ஒடிஷாவின் பாலசோர் ரயில் விபத்தைப் போல நிகழ்ந்த கவரைப்பேட்டை ரயில் விபத்து குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. ரயில்வே ஊழியர்கள் 13 பேருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ.-ன் அதிகாரிகளும் நேற்று விசாரணையைத் தொடங்கினர். மனித தவறுகளால் விபத்து நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படும் நிலையில் சதிவேலைகள், நாசவேலைகள் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் களமிறக்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விசாரணையில் சரக்கு ரயில் நின்றிருந்த தண்டவாளம் மற்றும் பயணிகள் ரயில் பிரியும் இடத்தில் சிதறிக் கிடந்த போல்ட், நட்டுகள், 95 இணைப்பு கம்பிகள் அகற்றப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் மோப்ப நாய்கள் உதவியுடன் அப்பகுதியில் ஆய்வுகளும் நடத்தப்பட்டன. இந்த விபத்து நிகழ்ந்த இடத்தில் கிடைத்த ஆதாரங்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் சேகரித்து சென்றுள்ளனர். கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக 15 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications