எஸ்.ஐ. வில்சன் கொலையாளிகளுக்கு சிம்கார்டு வழங்கிய வழக்கு- என்.ஐ.ஏ.வுக்கு மாற்றம்
Recommended Video
சென்னை: கன்னியாகுமரி எஸ்.ஐ. வில்சன் கொலையாளிகளுக்கு சிம்கார்டு வழங்கிய வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி களியக்காளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த எஸ்.ஐ. விசல்னை கடந்த 8-ந் தேதி அப்துல் சமீம், தவ்ஃபிக் ஆகிய 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

இந்த 2 தீவிரவாதிகளும் கர்நாடகா மாநிலம் உடுப்பியில் பதுங்கியிருந்த போது கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு உதவியதாக பெங்களூரு, காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரத்தில் தீவிரவாதிகளுக்கு சிம்கார்டுகளை வாங்கி கொடுத்த 6 பேரும் சிக்கினர். இந்நிலையில் தீவிரவாதிகளுக்கு சிம்கார்டு வாங்கி கொடுத்த வழக்கு தற்போது தேசிய புலனாய்வு ஏஜென்சியாக என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
தீவிரவாதிகளுக்கு வெளிநாட்டு தொடர்புகள் இருக்கலாம் என்பதால் வில்சன் கொலை தொடர்பான அனைத்து வழக்குகளுமே விரைவில் என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்படலாம் என்கின்றன போலீஸ் வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications