இப்படி வாழக் கூடாது.. பாடம் சொல்லும் நிர்மலா தேவியின் வாழ்க்கை!
Recommended Video

சென்னை: ஆணாக இருந்தாலும் சரி , பெண்ணாக இருந்தாலும் சரி தனிமனித ஒழுக்கம் வேண்டும் என்பது இல்லாவிட்டால் வாழ்க்கை எப்படி போகும் என்பது நிர்மலா தேவியின் வாழ்க்கை உணர்த்தும் பாடமாகும்.
ஒருவனுக்கு ஒருத்தி என்பது தமிழர் பண்பாடு. ஆனால் இன்று காலம் மாற மாற இதுபோன்ற பண்பாடுகளும் மாறிக் கொண்டே செல்கிறது. ஆண் திருமணமான பெண்ணுடன் தொடர்பில் இருப்பதும் , ஒரு பெண் திருமணமான ஆணுடன் தொடர்பில் இருப்பதும் சர்வ சாதாரணமாகிவிட்டது.
இவை முக்கியமாக பொழுதுபோக்கிற்காகவும் பணம், பதவி, சந்தோஷத்திற்காகவும் நடக்கும் யாரும் விரும்பத்தகாத விஷயமாகும். அப்படி பணம், பதவி ஆகியவற்றிற்காக அக்னி சாட்சியாக தாலி கட்டிய மனைவிக்கு கணவன் துரோகம் செய்வதும், மனைவியை மற்றொரு தாயாக பாவிக்கும் கணவருக்கு மனைவி துரோகம் செய்வதும் வீட்டுக்கு வீடு (சில) வாசற்படியாகிவிட்டது.
[உன் மகளும் வருவாரா?... நிர்மலாதேவியையே அதிர வைத்த முருகனின் கேள்வி! ]

பிரச்சினை
யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் கள்ளக்காதல் குற்றமில்லை என உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்து விட்டது. இதனால் கள்ளத்தொடர்பில் ஈடுபடும் ஆண்களுக்கு வழங்கப்பட்டு வந்த 2 ஆண்டுகள் சிறை தண்டனை இனி இல்லை என்றாகிவிட்டது. இதுபோன்ற தனிமனித ஒழுக்கத்தை கடைபிடிக்காததால் இந்த விஷயம் பிரச்சினையாகாத வரை இனிக்கும்.

பகீர் கிளப்புகிறது
ஆனால் அதே உல்லாச வாழ்க்கை பிரச்சினை என்று வந்து விட்டால் சிக்கல்தான். இதுதான் பேராசிரியர் நிர்மலா தேவிக்கு நடந்தது. நல்ல படித்த பட்டதாரியான இவர் முதலில் கணவரின் கள்ளக்காதலை எதிர்த்தார். ஆனால் இறுதியில் இவருக்கே 10 கள்ளக்காதல்கள் இருந்துள்ளது பகீர் கிளப்புகிறது.

எதிர்காலம்
கணவருக்கு தொழிலில் நஷ்டம், தனக்கு வேலையின்மை இதெல்லாம் கூறி கள்ளக்காதலை நியாயப்படுத்திவிட முடியுமா. இரு பெண்களுக்கு தாயான நிர்மலா தேவியும் கள்ளக்காதலை கண்டுக்காமல் விட்ட சரவணபாண்டியனும் (நிர்மலாவின் கணவர்), தங்களது சந்தோஷத்தை மட்டுமே நினைத்தார்களே தவிர இரு பெண் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சிறிதும் கவலைக் கொள்ளவில்லை.

மகளின் வாழ்க்கை
முருகன் தனது மகளின் சடங்கு ஆல்பத்தை பார்த்து மகள் வருவாளா என கேட்டதாக நிர்மலா தேவியே கூறியுள்ளார். அதற்கு அவரோ அவர் வரமாட்டார் என்று கூறியுள்ளார். தப்பி தவறியும் மகளை கேட்கிறாயா என கோபப்படவில்லை. மகள்கள் மீதுதான் எத்தனை பாசம் நிர்மலாதேவிக்கு!. தன் வாழ்க்கைதான் திசை மாறி போனது. ஆனால் இவர் சற்று சுதாரிக்காமல் இருந்திருந்தால் இவரது மகளின் வாழ்க்கையும் நாசமாகியிருக்கும்.

வாக்குமூலம்
மாதா, பிதா, குரு, தெய்வம் என்று ஆசிரியருக்கு அடுத்த நிலையில்தான் எல்லாம் வல்ல கடவுளையே வைத்துள்ளோம். ஆனால் இவரோ வயிற்றை கட்டி , வாயை கட்டி தன்னை நம்பி கல்லூரிக்கு அனுப்பும் ஏழைகளின் மகள்களின் வாழ்க்கையையும் நாசமாக்க பார்த்துள்ளார். சரி இவர்தான் இப்படி என்றால், முருகனும் கருப்பசாமியும்தான் மாணவிகளை அழைத்து வர சொன்னதாக நிர்மலா தேவி வாக்குமூலம் அளித்துள்ளார்.

பணம் மட்டுமே
நிச்சயமாக மாணவிகளின் வாழ்க்கையுடன் விளையாட நினைத்ததில் இவர்கள் இருவருக்கும் மட்டும் பங்கு இருந்திருக்காது. முக்கிய புள்ளிகள் சிக்காமல் இருக்க ஆனால் இவர்கள் மூவரும் பலிகடாவாக்கப்பட்டுள்ளனர். இனி முருகன், கருப்பசாமியின் வாழ்க்கை கேள்விக்குறிதான். எனவே தனிமனித ஒழுக்கம் இல்லாவிட்டால் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி எத்தனை இடியாப்ப சிக்கல்களை கொடுக்கும் என்பதற்கு முருகன், கருப்பசாமி, நிர்மலா தேவி ஆகியோரிடம் இருந்து பாடம் கற்க வேண்டும். ஆசிரியர்கள் கண்ணியமாக இருக்க வேண்டும். பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல என்பதை உணர வேண்டும்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications