இப்படி வாழக் கூடாது.. பாடம் சொல்லும் நிர்மலா தேவியின் வாழ்க்கை!
Recommended Video

சென்னை: ஆணாக இருந்தாலும் சரி , பெண்ணாக இருந்தாலும் சரி தனிமனித ஒழுக்கம் வேண்டும் என்பது இல்லாவிட்டால் வாழ்க்கை எப்படி போகும் என்பது நிர்மலா தேவியின் வாழ்க்கை உணர்த்தும் பாடமாகும்.
ஒருவனுக்கு ஒருத்தி என்பது தமிழர் பண்பாடு. ஆனால் இன்று காலம் மாற மாற இதுபோன்ற பண்பாடுகளும் மாறிக் கொண்டே செல்கிறது. ஆண் திருமணமான பெண்ணுடன் தொடர்பில் இருப்பதும் , ஒரு பெண் திருமணமான ஆணுடன் தொடர்பில் இருப்பதும் சர்வ சாதாரணமாகிவிட்டது.
இவை முக்கியமாக பொழுதுபோக்கிற்காகவும் பணம், பதவி, சந்தோஷத்திற்காகவும் நடக்கும் யாரும் விரும்பத்தகாத விஷயமாகும். அப்படி பணம், பதவி ஆகியவற்றிற்காக அக்னி சாட்சியாக தாலி கட்டிய மனைவிக்கு கணவன் துரோகம் செய்வதும், மனைவியை மற்றொரு தாயாக பாவிக்கும் கணவருக்கு மனைவி துரோகம் செய்வதும் வீட்டுக்கு வீடு (சில) வாசற்படியாகிவிட்டது.
[உன் மகளும் வருவாரா?... நிர்மலாதேவியையே அதிர வைத்த முருகனின் கேள்வி! ]

பிரச்சினை
யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் கள்ளக்காதல் குற்றமில்லை என உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்து விட்டது. இதனால் கள்ளத்தொடர்பில் ஈடுபடும் ஆண்களுக்கு வழங்கப்பட்டு வந்த 2 ஆண்டுகள் சிறை தண்டனை இனி இல்லை என்றாகிவிட்டது. இதுபோன்ற தனிமனித ஒழுக்கத்தை கடைபிடிக்காததால் இந்த விஷயம் பிரச்சினையாகாத வரை இனிக்கும்.

பகீர் கிளப்புகிறது
ஆனால் அதே உல்லாச வாழ்க்கை பிரச்சினை என்று வந்து விட்டால் சிக்கல்தான். இதுதான் பேராசிரியர் நிர்மலா தேவிக்கு நடந்தது. நல்ல படித்த பட்டதாரியான இவர் முதலில் கணவரின் கள்ளக்காதலை எதிர்த்தார். ஆனால் இறுதியில் இவருக்கே 10 கள்ளக்காதல்கள் இருந்துள்ளது பகீர் கிளப்புகிறது.

எதிர்காலம்
கணவருக்கு தொழிலில் நஷ்டம், தனக்கு வேலையின்மை இதெல்லாம் கூறி கள்ளக்காதலை நியாயப்படுத்திவிட முடியுமா. இரு பெண்களுக்கு தாயான நிர்மலா தேவியும் கள்ளக்காதலை கண்டுக்காமல் விட்ட சரவணபாண்டியனும் (நிர்மலாவின் கணவர்), தங்களது சந்தோஷத்தை மட்டுமே நினைத்தார்களே தவிர இரு பெண் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சிறிதும் கவலைக் கொள்ளவில்லை.

மகளின் வாழ்க்கை
முருகன் தனது மகளின் சடங்கு ஆல்பத்தை பார்த்து மகள் வருவாளா என கேட்டதாக நிர்மலா தேவியே கூறியுள்ளார். அதற்கு அவரோ அவர் வரமாட்டார் என்று கூறியுள்ளார். தப்பி தவறியும் மகளை கேட்கிறாயா என கோபப்படவில்லை. மகள்கள் மீதுதான் எத்தனை பாசம் நிர்மலாதேவிக்கு!. தன் வாழ்க்கைதான் திசை மாறி போனது. ஆனால் இவர் சற்று சுதாரிக்காமல் இருந்திருந்தால் இவரது மகளின் வாழ்க்கையும் நாசமாகியிருக்கும்.

வாக்குமூலம்
மாதா, பிதா, குரு, தெய்வம் என்று ஆசிரியருக்கு அடுத்த நிலையில்தான் எல்லாம் வல்ல கடவுளையே வைத்துள்ளோம். ஆனால் இவரோ வயிற்றை கட்டி , வாயை கட்டி தன்னை நம்பி கல்லூரிக்கு அனுப்பும் ஏழைகளின் மகள்களின் வாழ்க்கையையும் நாசமாக்க பார்த்துள்ளார். சரி இவர்தான் இப்படி என்றால், முருகனும் கருப்பசாமியும்தான் மாணவிகளை அழைத்து வர சொன்னதாக நிர்மலா தேவி வாக்குமூலம் அளித்துள்ளார்.

பணம் மட்டுமே
நிச்சயமாக மாணவிகளின் வாழ்க்கையுடன் விளையாட நினைத்ததில் இவர்கள் இருவருக்கும் மட்டும் பங்கு இருந்திருக்காது. முக்கிய புள்ளிகள் சிக்காமல் இருக்க ஆனால் இவர்கள் மூவரும் பலிகடாவாக்கப்பட்டுள்ளனர். இனி முருகன், கருப்பசாமியின் வாழ்க்கை கேள்விக்குறிதான். எனவே தனிமனித ஒழுக்கம் இல்லாவிட்டால் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி எத்தனை இடியாப்ப சிக்கல்களை கொடுக்கும் என்பதற்கு முருகன், கருப்பசாமி, நிர்மலா தேவி ஆகியோரிடம் இருந்து பாடம் கற்க வேண்டும். ஆசிரியர்கள் கண்ணியமாக இருக்க வேண்டும். பணம் மட்டுமே வாழ்க்கை அல்ல என்பதை உணர வேண்டும்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications