நிவர் புயல்.. பெட்ரோல் பங்க்குகள் செயல்படுமா.. வெளியானது அறிவிப்பு
தமிழகத்தில் பெட்ரோல் பங்க் வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
சென்னை: பெட்ரோல் பங்க்குகள் வழக்கம்போல் இயங்கும் என பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகி உள்ள நிவர் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நிவர் புயல் காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே நாளை கரையை கடக்கிறது.
இதனைத்தொடர்ந்து புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு உள்ளும் இன்று மதியம் முதல் பஸ் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.. மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது என்று தமிழக முதல்வரும் தெரிவித்திருந்தார்.

மதுரை
மேலும் விழுப்புரம் வழியாக திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, குமரிக்கு செல்லும் அரசு பஸ்கள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டது. மேலும் புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆம்னி பஸ் சேவை நிறுத்தப்படுகிறது.

முன்னெச்சரிக்கை
இந்நிலையில், நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை, புதுக்கோட்டை, விழுப்புரம் உட்பட 7 மாவட்டங்களில் பஸ் சேவை நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் பேருந்து நிலையங்களில் பொதுமக்கள் சிக்கி தவித்து வருகின்றனர்.. பஸ் சேவை நிறுத்தம் குறித்த அரசின் அறிவிப்பு பற்றி அறியாதவர்களும் பஸ் ஸ்டாண்டில் மதியம் முதலே அவஸ்தை பட்டுவிட்டனர்.

அதிக கட்டணம்
இந்த 7 மாவட்டங்களில் பஸ் ஓடாததால், தனியார் வாகனங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.. இதனிடையே, பெட்ரோல் பங்க்குகள் நாளை வழக்கம்போல் இயங்கும் என பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

பெட்ரோல்
ஆனால், கடலூர் ,விழுப்புரம், புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் நிவர் புயல் கரையை கடக்கும்போது பெட்ரோல், டீசல் விற்பனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்றும் புயல் கரையை கடந்தபிறகு தக்க பாதுகாப்புடன் மீண்டும் பெட்ரோல், டீசல் விற்பனை தொடங்கப்படும், மற்ற மாவட்டங்களில் வழக்கம்போல பெட்ரோல், டீசல் விற்பனை நடைபெறும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விற்பனை
புயல் கரையை கடந்தபிறகு தக்க பாதுகாப்புடன் மீண்டும் பெட்ரோல், டீசல் விற்பனை தொடங்கப்படும். மற்ற மாவட்டங்களில் வழக்கம்போல பெட்ரோல், டீசல் விற்பனை நடைபெறும் என்றும் பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கையாக இந்த 7 மாவட்டங்களிலும் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் வாகன ஓட்டிகளின் கூட்டம் அலைமோதியதை காண முடிந்தது.
-
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்!












Click it and Unblock the Notifications