Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிவர் புயல்.. பெட்ரோல் பங்க்குகள் செயல்படுமா.. வெளியானது அறிவிப்பு

தமிழகத்தில் பெட்ரோல் பங்க் வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெட்ரோல் பங்க்குகள் வழக்கம்போல் இயங்கும் என பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகி உள்ள நிவர் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நிவர் புயல் காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே நாளை கரையை கடக்கிறது.

இதனைத்தொடர்ந்து புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு உள்ளும் இன்று மதியம் முதல் பஸ் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.. மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது என்று தமிழக முதல்வரும் தெரிவித்திருந்தார்.

மதுரை

மதுரை

மேலும் விழுப்புரம் வழியாக திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, குமரிக்கு செல்லும் அரசு பஸ்கள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டது. மேலும் புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆம்னி பஸ் சேவை நிறுத்தப்படுகிறது.

முன்னெச்சரிக்கை

முன்னெச்சரிக்கை

இந்நிலையில், நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை, புதுக்கோட்டை, விழுப்புரம் உட்பட 7 மாவட்டங்களில் பஸ் சேவை நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் பேருந்து நிலையங்களில் பொதுமக்கள் சிக்கி தவித்து வருகின்றனர்.. பஸ் சேவை நிறுத்தம் குறித்த அரசின் அறிவிப்பு பற்றி அறியாதவர்களும் பஸ் ஸ்டாண்டில் மதியம் முதலே அவஸ்தை பட்டுவிட்டனர்.

அதிக கட்டணம்

அதிக கட்டணம்

இந்த 7 மாவட்டங்களில் பஸ் ஓடாததால், தனியார் வாகனங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.. இதனிடையே, பெட்ரோல் பங்க்குகள் நாளை வழக்கம்போல் இயங்கும் என பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

பெட்ரோல்

பெட்ரோல்

ஆனால், கடலூர் ,விழுப்புரம், புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் நிவர் புயல் கரையை கடக்கும்போது பெட்ரோல், டீசல் விற்பனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்றும் புயல் கரையை கடந்தபிறகு தக்க பாதுகாப்புடன் மீண்டும் பெட்ரோல், டீசல் விற்பனை தொடங்கப்படும், மற்ற மாவட்டங்களில் வழக்கம்போல பெட்ரோல், டீசல் விற்பனை நடைபெறும்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விற்பனை

விற்பனை

புயல் கரையை கடந்தபிறகு தக்க பாதுகாப்புடன் மீண்டும் பெட்ரோல், டீசல் விற்பனை தொடங்கப்படும். மற்ற மாவட்டங்களில் வழக்கம்போல பெட்ரோல், டீசல் விற்பனை நடைபெறும் என்றும் பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கையாக இந்த 7 மாவட்டங்களிலும் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் வாகன ஓட்டிகளின் கூட்டம் அலைமோதியதை காண முடிந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+