கரையை கடந்த நிவர் புயல்- 4 மாவட்டங்களில் கனமழை;20 மாவட்டங்களில் மிதமான மழை
நிவர் புயல் கரையை கடந்தாலும் சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னை: நிவர் புயல் கரையை கடந்துவிட்ட 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழையும் திண்டுக்கல் உட்பட 20 மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது.
நிவர் புயலின் தாக்கத்தினால் சென்னையில் 8 செமீ மழை பதிவாகியுள்ளது. கடலூரில் கடந்த 12 மணி நேரத்தில் 16 செ.மீ மழை பெய்துள்ளது புயல் கரையை கடந்த பின்னரும் கனமழை தொடரும் சென்னையில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

புயல் கரையை கடந்தாலும் காற்றுடன் கனமழை நீடிக்கும். அரியலூர், கடலூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், நாகை, மயிலாடுதுறை ஆகிய 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.
புயலின் வேகத்தினால் பல பகுதிகளில் காற்றுடன் கனமழை கொட்டி வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் அடையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கூடவே கனமழையும் பெய்து வருவதால் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.
இதனிடையே நிவர் புயல் கரையை கடந்த நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. இப்போது நிவர் புயல் வலு குறைந்ததால் மழையும் படிப்படியாக குறையக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications