திமுகவும், அதிமுகவும் இணைந்து தற்போதும் ஆட்சி அமைக்க முயற்சி.. அமைச்சர் நிர்மல் குமார் பகீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவும், அதிமுகவும் இணைந்து ஆட்சி செய்ய இப்போதுவரை, இந்த நிமிடம் வரை முயற்சி செய்துகொண்டு இருக்கிறார்கள் என அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளார். இதனால் அவர்களது கூட்டணி கட்சியினரே வெளியில் வருகிறார்கள் என்றும், திமுக எம்.எல்.ஏக்களே ராஜினாமா செய்யும் முடிவில் உள்ளதாகவும் நிர்மல் குமார் கூறினார்.

அமைச்சர் நிர்மல் குமார் மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திமுகவும், அதிமுகவும் இணைந்து ஆட்சி செய்ய இப்போதும் முயற்சி செய்துகொண்டு இருக்கிறார்கள். இன்று காலை வரைக்கும் முயற்சிகள் செய்துகொண்டு தான் இருக்கின்றனர். ஒவ்வொரு நாளும் ஸ்டாலினும், உதயநிதியும், எடப்பாடி பழனிசாமியும் ஆட்சி அமைக்க ஒவ்வொரு நாளும் முயற்சி செய்துகொண்டு வருகிறார்கள். அவர்கள் ஒரு டீமை வைத்துக் கொண்டு இந்த வேலைகளை செய்துகொண்டு வருகிறார்கள்.

DMK - AIADMK Still Trying to Form Government Together Minister Nirmal Kumar

ஆட்சியில் இல்லாத போதே இப்படி..

பெரும்பான்மை மக்கள் முடிவு எடுத்து விஜய்யை முதல்வர் ஆக ஆக்கியிருக்கிறார்கள். அதனை எதிர்த்து குறுக்கு வழியில் யாரையாவது பர்ச்சேஸ் செய்யலாமா என முயற்சி செய்கின்றனர். மு.க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், எடப்பாடியும் அவரது மகனும் சேர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னைக்கு காலையில் வரை செய்துகொண்டு வருகிறார்கள். இவர்களது இந்த வெளிப்பாடு தான் ஒவ்வொருவராக அவர்களது கூட்டணியில் இருந்து வெளியில் வந்துகொண்டு இருக்கின்றனர். இது தான் முக்கிய காரணம்.

ஒவ்வொரு கட்சியையும் உடைக்கின்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களது கூட்டணியில் உள்ள கட்சிகளை உடைக்கும் வேலைகளை, எல்லாரையும் மிரட்டும் வேலைகளை செய்துகொண்டு இருக்காங்க.. பணத்தை கொடுத்து எல்லாரையும் வாங்கும் வேலைகளை செய்றாங்க.. மதிமுகவில் 2 எம்.எல்.ஏக்களை அவங்களுடைய கட்சி கூட்டத்திற்கே போக விடாமல் செய்தது யார்.. அவங்க உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்று இருக்கலாம். ஆனால் அவங்களுடைய கட்சி கூட்டத்துக்கு கூட போக விடாமல் மிரட்டுகிறார்கள். ஆட்சியில் இல்லாத போதே இப்படி செய்கிறார்கள். ஆட்சியில் இருந்தால் என்ன எல்லாம் செய்வார்கள்.

திமுகவும், அதிமுகவும் இணைந்து ஆட்சி அமைக்க

மு.க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், அவர்களது மாப்பிள்ளையும், எடப்பாடி, எடப்பாடி மகன் எல்லாரும் சேர்ந்து இன்று காலை இந்த நிமிடம் வரை இருவரும் சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்து வருகிறார்கள். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் இதற்கான வேலைகளை செய்து வருகின்றனர். இதனை அவர்களை மறுக்க முடியுமா என சொல்லுங்கள். இதனை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதனால் தான் அவங்க கூட்டணியில் உள்ளவர்களே வெளியேறுகின்றனர். திமுக எம்.எல்.ஏக்களே ராஜினாமா செய்தால் கூட ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

இன்னைக்கு நீங்க இரண்டு பேரும் சேர்ந்து ஆட்சி அமைத்துவிடுவீர்கள். ஆனால் நாளைக்கு மக்களை எப்படி சந்திப்பீங்க.. இதனால் திமுக எம்.எல்.ஏக்களே ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறார்கள். பலர் வெளியேறும் நிலையிலும், ராஜினாமா செய்யும் முடிவிலும் உள்ளனர். இந்த இரண்டு குடும்பத்தினர் எடுக்கும் முடிவு தான் எல்லாத்துக்கும் காரணம்.. அவங்களுடைய ஊழலை மறைக்க, இப்படி செய்துகொண்டு இருக்கிறார்கள். ஜனநாயகத்தை படுகொலை செய்ய தயாராக இருக்கின்றனர்.

அரசியல் வியாபாரம்

பெ சண்முகம் கூட அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் போட்டு இருக்கிறார். அவங்களிடம் என்ன கொள்கை இருக்கு. நீங்க இரண்டு பேரும் சேர்ந்து ஆட்சி அமைக்க விரும்பினால் இதை விட அரசியல் கேவலம் வேறு ஒன்றும் கிடையாது.. இதைவிட ஒரு அரசியல் வியாபாரம் எதுவும் கிடையாது. இந்த இரண்டு குடும்பமும் இத்தோட இந்த அரசியலை விட்டு நீங்க வேண்டும்.. இவங்க இன்னமும் இந்த அரசை எவ்வளவுக்கு எவ்வளவு தொந்தரவு செய்ய வேண்டுமோ அந்த அளவுக்கு செய்துகொண்டே இருக்கின்றனர்.. இவ்வாறு அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+