பெட்ரோல் விலையில் மாற்றமில்லை... டீசல் விலையில் 10 காசுகள் அதிகரிப்பு
சென்னை: பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.72 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன
நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலையில் மாற்றமின்றி, டீசல் விலை 10 காசுகள் அதிகரித்து விற்பனை ஆகிறது.

சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெயின் விலையை பொறுத்து, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. அந்த வகையில், கடந்த வாரம் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்தனர்.
கடந்தாண்டு, அக்டோபர் மாதம் 17-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.86.10, டீசல் விலை ரூ.80.04 என்ற உச்சத்தை தொட்டது. இதனையடுத்து, பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்தது.
கடந்த இரண்டு தினங்களாக கச்சா எண்ணெய் விலை சரிந்து வந்த நிலையில், நேற்று பேரலுக்கு 0.51 டாலர்கள் அதிகரித்தது. தற்போது கச்சா எண்ணெயின் விலை 53.13 டாலராக உள்ளது. அதன்படி, சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.72 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications