2ஆவது நாளாக.. சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை!
சென்னை: சென்னையில் 2ஆவது நாளாக இன்று பெட்ரோல் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே நீடிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. 137 நாட்களாக பெட்ரோல்,டீசல் விலை மாற்றமின்றி விற்பனையாகி வந்தது.
கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, ஒருசில மாதங்கள் வரை பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்னர் படிப்படியாக விலை உயர்ந்து ஒரு லிட்டர் பெட்ரோல் 85 ரூபாயை எட்டியது. எதிர்கட்சியினரின் போராட்டம், பீகார் மாநில தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் டீசல் விலை மீண்டும் மெதுவாக உயர்ந்தது.

பெட்ரோல், டீசல் விலை
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மீண்டும் எண்ணெய் நிறுவனங்கள் படிப்படியாக விலையை உயர்த்தின. தமிழகம், மேற்கு வங்க மாநிலம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் விலை உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு கொரோனா 2வது அலையின்போது சற்று கட்டுக்குள் இருந்தது. பின்னர் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு தொடர்ந்து பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ரூபாய் வரை விற்பனையானது. டீசல் 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது.

விலை குறைந்தது
தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது. தீபாவளி பண்டிகையையொட்டி பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததால் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது. இதனைத் தொடர்ந்து தீபாவளி பண்டிகையையொட்டி பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததால் பெட்ரோல், டீசல் விலை நாடுமுழுவதும் கணிசமாக குறைந்தது. பாஜக ஆளும் மாநிலங்களில், அந்தந்த மாநில அரசுகளும் வரியை குறைத்ததால் பெட்ரோல்- டீசல் விலை கணிசமாக குறைந்தது.

வெற்றிகரமான 137 நாள்கள்
இதையடுத்து, கடந்த நவம்பர் மாதம் முதல் சென்னையில் பெட்ரோல் லிட்டர் 101.40 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், 137வது நாளாக சென்னையில் கடந்த சில தினங்கள் வரை பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதேவிலை நீடித்து வந்தது. பல்க் டீசல் விலை ரூ 25 ஆக உயர்ந்த போதும் சில்லறை விற்பனையில் டீசல் விலை உயராமல் இருந்தது. நேற்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும், டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
உக்ரைன்- ரஷ்யா போரால் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 120 டாலர்கள் உயர்ந்துள்ளது. இதனால் பெட்ரோல் டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. 5 மாநில சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டே விலையேற்றப்படவில்லை என விவாதிக்கப்பட்டது. ஆனால் அந்த 5 மாநில சட்டசபை தேர்தல் முடிந்து பாஜக அமோக வெற்றி பெற்ற நிலையிலும் 137 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியில் இருந்தனர்.

மக்களுக்கு பேரிடி
இந்த நிலையில் பொதுமக்களுக்கு பேரிடியாக கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி சென்னையில் பெட்ரோல் டீசல் , வீட்டு உபயோக சிலிண்டர் உயர்ந்துள்ளது. சென்னையில் சுமார் நான்கரை மாதங்களுக்கு பிறகு பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின.

17 நாட்கள்
சென்னையில் கடந்த 17 நாட்களாக தினந்தோறும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. அதில் 4 நாட்களை தவிர மற்ற நாட்களில் விலை உயர்ந்தது. அந்த வகையில் சென்னையில் நேற்று முன் தினம் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ 110.85 காசுகளுக்கு விற்பனையானது. அது போல் டீசல் விலை ரூ 100.94 க்கு விற்பனையானது. நேற்றைய தினம் அதே விலையே நீடித்தது. சென்னையில் இரண்டாவது நாளாக இன்று பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை.












Click it and Unblock the Notifications