ஹேப்பி நியூஸ்.. மண்டலங்களுக்குள் செல்ல இனி இ-பாஸ் தேவையில்லை.. அனைத்து வாகனங்களுக்கும் அனுமதி
சென்னை: தமிழக அரசு ஊரடங்கு விவகாரத்தில் 8 மண்டலங்களாக தமிழகத்தை பிரித்துள்ளது. அந்த 8 மண்டலங்களுக்குள் பொதுமக்கள் வாகனங்களில் செல்ல இ- பாஸ் தேவையில்லை என்று அறிவித்துள்ளது.
Recommended Video
மதுரை மண்டலம், கோவை மண்டலம், வேலூர் மண்டலம், திருநெல்வேலி மண்டலம், விழுப்புரம் என 8 மண்டலங்களுக்குள் உள்ள மாவட்டங்களுக்குள் பொதுமக்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் இ பாஸ் தேவையில்லை.
சென்னையிலும், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு பகுதிகளை தவிர்த்து அனைத்து மண்டலங்களுக்குள், 50 விழுக்காடு பேருந்துகள் மட்டும் இயக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

பேருந்துகள் இயக்கம்
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை தவிர அனைத்து பகுதிகளிலும் பேருந்து சேவைகள் இயக்கப்பட உள்ளது. ஆனால் மதுரை மண்டலம், கோவை மண்டலம், வேலூர் மண்டலம், திருநெல்வேலி மண்டலம், விழுப்புரம் மண்டலம் என மாவட்டங்களை பிரித்துள்ள அரசு, அந்தந்த மண்டலங்களுக்குள் மட்டுமே பேருந்துகள் இயங்கும் என அறிவித்துள்ளது.

60% விழுக்காடு பயணிகள்
சென்னையிலும், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகளில் அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் தனியார் பேருந்துகள் இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது. பேருந்துகளில் உள்ள மொத்த இருக்கைகளில், 60 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அனைத்து வாகனங்களும்
மண்டலத்திற்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இ-பாஸ் தேவையில்லை என்ற நிலையில், பொது போக்குவரத்து பேருந்துகளில் பயணிக்கவும் இ-பாஸ் அவசியமில்லை என்று அரசு அறிவித்துள்ளது. அனுமதிக்கப்பட்ட பகுதிகளுக்குள் தவிர, மண்டலங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கிடையேயுமான பேருந்து போக்குவரத்து சேவைகளுக்கான தடை தொடர்கிறது.

மண்டலங்களுக்கு இடையே
அரசால் தனியாக வெளியிடப்பட உள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி பொது போக்குவரத்திற்கான பேருந்துகள் இயக்கப்படும். அனைத்து வகையான வாகனங்களும் மண்டலத்திற்குள் இயங்க அனுமதிக்கப்படுகிறது. அவைகளுக்கு இ-பாஸ் தேவையில்லை. வெளி மாநிலங்களுக்கு சென்று வரவும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரவும், மண்டலங்களுக்கிடையே சென்று வரவும், இ-பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆட்டோ டாக்ஸி
வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களை, ஓட்டுநர் தவிர்த்து, மூன்று பயணிகளை மட்டுமே கொண்டு, மண்டலத்திற்குள் TN e-pass இன்றி பயன்படுத்தலாம். ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர்த்து, இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்கலாம். சைக்கிள் ரிக்ஷாவுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications