நிதி ஒதுக்காத மத்திய அரசு.. கடுமையான நிதி நெருக்கடியில் சென்னை மெட்ரோ.. முடங்கும் 2ம் கட்ட பணிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மெட்ரோ 2ம் கட்டத்திற்கு மத்திய அரசு நிதி எதுவும் ஒதுக்காத நிலையில், இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த வருடத்திற்கு மட்டும் 12 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட் பிளான் செய்யப்பட்ட நிலையில் 8 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே திரட்டப்பட்டு உள்ளது. இதனால் 40 சதவிகிதம் பட்ஜெட் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

இரண்டாம் மெட்ரோவின் மொத்த பட்ஜெட் 63,246 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். மத்திய அரசு இதற்கு நிதி ஒதுக்குவதாக கூறிவிட்டு, ஒதுக்காத நிலையில் மெட்ரோ பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

metro

சென்னை மெட்ரோ ரயில் கட்டம்-2 திட்டம் மாநில அரசு திட்டமாக செயல்படுத்தப்படுவதால், மத்திய அரசு இதற்கு நிதி தர முடியாது என்று கூறி கைகழுவி உள்ளது. நாடாளுமன்றத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் இணை அமைச்சர் டோகன் சாஹு, இந்தத் திட்டத்திற்கான செலவை தமிழக அரசே ஏற்கும் என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதன் விளைவாக, 2022-23 மற்றும் 2023-24 ஆம் ஆண்டுகளில், மத்திய அரசு எந்த நிதியையும் வழங்கவில்லை. இனியும் வழங்க முடியாது என்று அறிவித்து உள்ளார். தயாநிதி மாறனின் கேள்விகளுக்குப் பதிலளித்த சாஹு, அதிக செலவில் உள்ள திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவது சாத்தியக்கூறு மற்றும் வளங்களின் இருப்பைப் பொறுத்தது. 63,246 கோடி மதிப்பீட்டில் 118.9கிமீ வழித்தடத்தை தமிழ்நாடு அரசு முன்மொழிந்துள்ளது. சென்னை மெட்ரோ கட்டம்-2 க்கு 63,246 கோடி மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது.

தற்போது, ​​சென்னை மெட்ரோ கட்டம்-2 திட்டம் மாநிலத் துறை திட்டமாக செயல்படுத்தப்பட்டு, அதைச் செயல்படுத்துவதற்கான செலவினம் தற்போது மாநில அரசால் ஏற்கப்படுகிறது, என்றார். முதல் கட்ட திட்டத்திற்கு மட்டுமே நாங்கள் நிதி கொடுத்தோம். இரண்டாம் கட்ட திட்டத்திற்கு நிதி வழங்க முடியாது என்று அறிவித்து உள்ளார்.

கைவிரிப்பு: சென்னை, மதுரை, கோயம்புத்தூருக்கு அமைக்கப்பட உள்ள மெட்ரோவிற்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காமல் தமிழ்நாடு அரசை மத்திய அரசு புறக்கணித்து வருகிறது. அதிலும் கோவை, மதுரையில் முழுமையான டிபிஆர் ரிப்போர்ட் அளிக்கப்பட்ட பின்பும் அங்கே பணிகளை தொடங்க அரசு இன்னும் அனுமதிக்கவில்லை. சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளுக்கு இதுவரை தமிழக அரசுக்கு மத்திய அரசு பணம் கொடுக்கவில்லை.

ஏசியன் வங்கி உள்ளிட்டசர்வதேசவங்கிகளின் உதவியுடன் தமிழக அரசு மெட்ரோ அமைத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாகவே தற்போது சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சேத்துப்பட்டு பகுதியில் பூமிக்கடியில் துளையிடுவதற்கு எல்&டி நிறுவனம் சிறுவாணி எனும் பிரமாண்ட துளையிடும் பணியினை முடித்து உள்ளது. 11 மாதப் பயணம் முடிந்து வெற்றிகரமாக பணியை முடித்தது 'சிறுவாணி' இயந்திரம்.

மெட்ரோ பணம்; உத்தர பிரதேசம் போன்ற முன்னேறாத மாநிலங்களில் 7 மெட்ரோ சேவைகள் உள்ள நிலையில் பொருளாதாரத்தில் 2ம் இடத்தில் தமிழ்நாட்டிற்கு, புதிய மெட்ரோ சேவைகளை தொடங்க இன்னும் மத்திய அரசு அனுமதி அளிக்காமல் உள்ளது. சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகளுக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டியும் கூட இதற்கு ஒரு ரூபாய் கூட மத்திய அரசு வழங்கவில்லை.

சென்னை மெட்ரோ 2.0 திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. இதனால் முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசின் பணத்தில்தான் கடன் வாங்கி திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மத்திய அரசு அனுமதி தராத காரணத்தால் மதுரை, கோவை மெட்ரோ என்று இரண்டு திட்டங்களும் கிடப்பில் போடப்பட்டு உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+